Sports
“வாய்ப்பு கொடுக்காமல் வெளியே உட்கார வைத்தால் எப்படி திறமையை நிரூபிப்பது ? ”- கேள்வி எழுப்பும் இளம் வீரர்
2007ம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆனாலும் இதுவரை ஆறு போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர். தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் ரன் குவித்து வந்தாலும் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்தார். இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் தனியார் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவர், 2019 உலகக்கோப்பைக்கான அணியில் தேர்வு பெறாதது கடினமாகத்தான் இருந்தது. நான் எதையும் நம்பிக்கையாக எடுத்துக் கொள்பவன். அதனால், இவற்றைப் போட்டு நான் குழப்பிக்கொள்ளமாட்டேன். உலகக்கோப்பையில் ஆடவேண்டும் என்ற என் கனவு வருங்காலத்தில் நிறைவேறும் என நம்புகிறேன்.
உண்மையான திறமைசாலியாக இருந்தாலும் பெரிய அளவில் தங்களை நிரூபிக்கக் கணிசமான வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும். அணிக்குள் வருவதும், போவதுமாக இருந்தால் அது ஒருவரின் மனநிலையைப் பாதிக்கும். எனவே திறமைசாலியாக இருந்தாலும், நிரூபிக்கக் கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும். இந்திய 'ஏ' அணியில் விளையாடியதை என்னை நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்பாகவே கருதுகிறேன்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!