Sports
‘அவரால் இரண்டு முறை உலகக் கோப்பை தவறவிட்டோம்’ - ரவி சாஸ்திரிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ராபின் சிங்
உலகக்கோப்பை 2019 கிரிக்கெட் தொடரை இந்தியாதான் நிச்சயம் வெல்லும் என்று கணிக்கப்பட்ட நிலையில், அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியடைந்து அதிர்ச்சியளித்தது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரோடு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், துணைப் பயிற்சியாளர்களின் பதவிக்காலம் முடிவடைந்தன. இதையடுத்து, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு புதிதாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பி.சி.சி.ஐ அறிவித்தது.
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீண்டும் விண்ணப்பித்திருக்கிறார். அதேபோல், இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் சிங்கும் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து உள்ளார்.
இதுகுறித்து தனியார் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த ராபின் சிங், “ பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் தலைமை கீழ் இந்திய அணி இரண்டு உலகக்கோப்பை தொடர்களில் அரையிறுதி போட்டியுடன் வெளியேறியது அதேபோல T-20 உலகக்கோப்பை தொடரிலும் அரையிறுதியுடன் வெளியேறி இருக்கிறது.
எனவே இந்த தோல்விகளை எண்ணி பி.சி.சி.ஐ நடவடிக்கை எடுக்கும் என எதிர்ப்பார்க்கிறேன். 2023 உலககோப்பைக்கு தயாராவதற்கு ஒரு மாற்றத்தை கொண்டுவருவது இந்திய அணிக்கு நன்மை தரும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து ரவிசாஸ்திரியை நீக்க வேண்டும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
T20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு : வாய்ப்பை பெற்ற, இழந்த வீரர்கள் யார் யார் ?
-
இதுதான் பாஜகவின் சமூகநீதியா ? - பாஜகவின் இடஒதுக்கீடு மோசடியை அம்பலப்படுத்திய முரசொலி !
-
திருமணத்துக்கு மறுப்பு : 3 நாட்கள் வன்கொடுமை செய்து சூடு போட்ட இளைஞர்-பாஜக ஆளும் உ.பி-யில் தொடரும் அவலம்!
-
“பிரஜ்வல் வீடியோவை நான்தான் பாஜக நிர்வாகியிடம் கொடுத்தேன்...” - அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்த ஓட்டுநர் !
-
எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்தின் எதிரொலி: இறுதியாக வாக்குப்பதிவு விபரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!