Sports
‘அவரால் இரண்டு முறை உலகக் கோப்பை தவறவிட்டோம்’ - ரவி சாஸ்திரிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ராபின் சிங்
உலகக்கோப்பை 2019 கிரிக்கெட் தொடரை இந்தியாதான் நிச்சயம் வெல்லும் என்று கணிக்கப்பட்ட நிலையில், அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியடைந்து அதிர்ச்சியளித்தது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரோடு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், துணைப் பயிற்சியாளர்களின் பதவிக்காலம் முடிவடைந்தன. இதையடுத்து, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு புதிதாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பி.சி.சி.ஐ அறிவித்தது.
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீண்டும் விண்ணப்பித்திருக்கிறார். அதேபோல், இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் சிங்கும் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து உள்ளார்.
இதுகுறித்து தனியார் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த ராபின் சிங், “ பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் தலைமை கீழ் இந்திய அணி இரண்டு உலகக்கோப்பை தொடர்களில் அரையிறுதி போட்டியுடன் வெளியேறியது அதேபோல T-20 உலகக்கோப்பை தொடரிலும் அரையிறுதியுடன் வெளியேறி இருக்கிறது.
எனவே இந்த தோல்விகளை எண்ணி பி.சி.சி.ஐ நடவடிக்கை எடுக்கும் என எதிர்ப்பார்க்கிறேன். 2023 உலககோப்பைக்கு தயாராவதற்கு ஒரு மாற்றத்தை கொண்டுவருவது இந்திய அணிக்கு நன்மை தரும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து ரவிசாஸ்திரியை நீக்க வேண்டும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“100 கி.மீ தூரத்திற்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம்!” : கிருஷ்ணகிரியில் துணை முதலமைச்சர் உரை!
-
“தி.மு.க. செய்த சாதனை என்ன என்பதை மக்கள் சொல்வார்கள்!” : பிரதமர் மோடிக்கு முரசொலி தலையங்கம் பதிலடி!
-
பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை மற்றும் ஓய்வூதிய உயர்வு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
-
“உயிர்களை பலியிடும் அற்ப அரசியல்”: ரஜினிகாந்த் குறித்த ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்!
-
28,639 பேருக்கு ரூ. 254.59 கோடி மதிப்பில் பிரம்மாண்ட அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் வழங்கினார்!