Sports
உலகக்கோப்பை தோல்வி எதிரொலி : இந்திய அணியிலிருந்து கல்தா கொடுக்கப்படும் முக்கிய புள்ளி !
உலகக் கோப்பை தொடரில் இந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து நிர்ணயித்த 240 ரன்களை எட்ட முடியாமல் இந்தியா 221 ரன்னில் ஆட்டமிழந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
தற்போது இருக்கும் இந்திய அணியின் பயிற்சியாளர்களின் பதவிக்காலம் உலகக்கோப்பை தொடருடன் முடிந்தது. அதன்படி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்காலம் நீட்டிக்க வாய்ப்புள்ளது. இந்த உலகக் கோப்பை தொடர் முழுக்க இந்திய அணியின் பவுலிங் மற்றும் பீல்டிங்கும் மிக சிறப்பாக இருந்தது.
ஆனால் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் சரியாக செயல்படவில்லை. இவரின் பயிற்சிக்கு கீழ் இந்திய பேட்டிங் சரியாக செயல்படவில்லை. 4ம் இடத்திற்கு சரியான வீரரை தேர்ந்தெடுக்க வில்லை என பல குற்றசாட்டுகள் உள்ளது. இதனால் சஞ்சய் பங்கர் பதவியை பி.சி.சி.ஐ நீட்டிக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். சஞ்சய் பங்கர் எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
Also Read
-
மும்முரமாக நடைபெறும் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலப் பணி! : அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு!
-
“முதலமைச்சர் கோப்பை 2025-ல் 16 லட்சம் இளைஞர்கள் பங்கேற்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“நாட்டிற்கு பெருமை சேருங்கள்! களம் நமதே! வெற்றி நமதே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
”குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை இளைஞர்கள் மீது கொட்டாதீர் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி!
-
முதலமைச்சர் கோப்பை – 2025 நிறைவு! : கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!