Sports
உலகக்கோப்பை தோல்வி எதிரொலி : இந்திய அணியிலிருந்து கல்தா கொடுக்கப்படும் முக்கிய புள்ளி !
உலகக் கோப்பை தொடரில் இந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து நிர்ணயித்த 240 ரன்களை எட்ட முடியாமல் இந்தியா 221 ரன்னில் ஆட்டமிழந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
தற்போது இருக்கும் இந்திய அணியின் பயிற்சியாளர்களின் பதவிக்காலம் உலகக்கோப்பை தொடருடன் முடிந்தது. அதன்படி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்காலம் நீட்டிக்க வாய்ப்புள்ளது. இந்த உலகக் கோப்பை தொடர் முழுக்க இந்திய அணியின் பவுலிங் மற்றும் பீல்டிங்கும் மிக சிறப்பாக இருந்தது.
ஆனால் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் சரியாக செயல்படவில்லை. இவரின் பயிற்சிக்கு கீழ் இந்திய பேட்டிங் சரியாக செயல்படவில்லை. 4ம் இடத்திற்கு சரியான வீரரை தேர்ந்தெடுக்க வில்லை என பல குற்றசாட்டுகள் உள்ளது. இதனால் சஞ்சய் பங்கர் பதவியை பி.சி.சி.ஐ நீட்டிக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். சஞ்சய் பங்கர் எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
Also Read
-
“இருளகற்றும் ஒளி சூரியனிடம்தான் உண்டு!” : திராவிட முன்னேற்றக் கழகம் சூளுரை!
-
“மின்வெட்டு.. ரீல்ஸ் போடாமல்.. போர்க்கால நடவடிக்கை எடுங்கள்” : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளாசல்!
-
“தமிழ்நாட்டை உலுக்கிய சேலம் பாலியல் வன்கொடுமை சம்பவம்” - சிபிசிஐடி விசாரிக்க இடதுசாரிகள் வலியுறுத்தல்!
-
“கழகத் தலைவரின் அன்பில்.. தாயின் பரிவையும், தலைவனின் தன்னம்பிக்கையும் பார்க்கிறோம்” : தங்கம் தென்னரசு!
-
“அதிமுக. MLAக்களை ஷாப்பிங் செய்து கொண்டிருக்கும் விஜய்; பாஜகவின் ஜெராக்ஸ்” : தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கு!