Sports
உலகக்கோப்பை கிரிக்கெட் : ஆரஞ்சு ஜெர்சியுடன் களமிறங்கும் இந்திய அணி!
உலகக்கோப்பை தொடர் கடந்த 30-ம் தேதி தொடங்கி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. தற்போது ஐ.சி.சி ஒரே நிறத்திலான சீருடையை இரு அணிகளும் அணிந்து விளையாட அனுமதி மறுத்துள்ளது. அதனால் முன்னேற்பாடாக அணியின் பிராதனமாக உள்ள சீருடையின் நிறத்திற்கு மாறுதலாக இரண்டாவதாக ஒரு சீருடையை தயார் செய்யும்படி முன்னதாகவே ஐ.சி.சி உத்தரவிட்டிருந்தது.
தற்போது இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணி வீரர்கள் நீல நிற சீருடையை அணிந்து விளையாடி வருகின்றனர். இதில் இரு அணிகள் நேருக்கு நேர் மோதும் சூழ்நிலை ஏற்படும்போது ஏதாவது ஒரு அணி தங்கள் அணியின் இரண்டாவது சீருடையை அணிந்து விளையாட வேண்டும். அதன்படி இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் மாற்று உடையில் ஆட வேண்டும்.
இங்கிலாந்து அணி உலகக்கோப்பையில் நீல நிற ஜெர்சி அணிந்து விளையாடுகிறது. இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை நடத்துவதால், அந்த அணி அதே ஜெர்சியில் விளையாட முடியும். இதனால் இந்திய அணி ஆரஞ்சு கலர் ஜெர்சியில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பங்களாதேஷுக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி தங்கள் சட்டைகளின் நிறத்தை பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாற்றியது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
-
“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!
-
200 யூனிட்டு மின்சாரம் முதல் விஜய்யின் மூன்று பித்தலாட்டங்கள் : புட்டுப்புட்டு வைத்த முரசொலி!
-
“முதல்வரின் தவறான தகவலை சுட்டிக் காட்டியதற்கு ரெய்டா? ; மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்” : எ.வ.வேலு பேட்டி!