Sports
பிரேசில் கால்பந்து வீரர் நெய்மார் மீது பாலியல் குற்றச்சாட்டு : மறுக்கும் நெய்மார்!
பிரேசில் கால்பந்து அணியின் கேப்டனாக இருந்த நெய்மார் ஒழுங்கீன நடவடிக்கைகளுக்காக கடந்த மாதம் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சாவ்பாலோ காவல்துறையின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி, பல்வேறு ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன. இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான பெண்ணை பாரீஸில் உள்ள விடுதிக்கு வரவழைத்ததாகவும், அவரது விருப்பமின்றி அவரை நெய்மார் பாலியல் வல்லுறவு செய்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பணம் பறிக்கும் திட்டத்தோடு வழக்கறிஞர் ஒருவர் அந்தப் பெண்ணைத் தூண்டிவிட்டு பொய்ப் புகார் அளித்துள்ளதாக நெய்மார் தரப்பு வழக்கறிஞர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். நெய்மாரும் இந்தப் புகாரை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
நெய்மார் தற்போது கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில் பிரேசில் அணிக்காக விளையாடுவதற்காக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். நெய்மார் கேப்டன் பதவிலியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து டேனி அல்வேஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
- 
	    
	      பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் 2025 : தங்கப்பதக்கம் வென்ற தீக்ஷாவுக்கு துணை முதல்வர் பாராட்டு!
- 
	    
	      ஒடிசா தேர்தல் முதல் ராமேஸ்வரம் கஃபே வரை.. “தமிழன் என்றால் அவ்வளவு கேவலமா?” -பட்டியலிட்டு RS பாரதி ஆவேசம்!
- 
	    
	      காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு & மாவட்ட கார்பன் நீக்கத் திட்டங்கள்... தமிழ்நாடு முன்னிலை!
- 
	    
	      “இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள்” -பட்டியலிட்டு தயாநிதி மாறன் MP பதிலடி!
- 
	    
	      முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !