Sports
பிரேசில் கால்பந்து வீரர் நெய்மார் மீது பாலியல் குற்றச்சாட்டு : மறுக்கும் நெய்மார்!
பிரேசில் கால்பந்து அணியின் கேப்டனாக இருந்த நெய்மார் ஒழுங்கீன நடவடிக்கைகளுக்காக கடந்த மாதம் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சாவ்பாலோ காவல்துறையின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி, பல்வேறு ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன. இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான பெண்ணை பாரீஸில் உள்ள விடுதிக்கு வரவழைத்ததாகவும், அவரது விருப்பமின்றி அவரை நெய்மார் பாலியல் வல்லுறவு செய்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பணம் பறிக்கும் திட்டத்தோடு வழக்கறிஞர் ஒருவர் அந்தப் பெண்ணைத் தூண்டிவிட்டு பொய்ப் புகார் அளித்துள்ளதாக நெய்மார் தரப்பு வழக்கறிஞர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். நெய்மாரும் இந்தப் புகாரை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
நெய்மார் தற்போது கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில் பிரேசில் அணிக்காக விளையாடுவதற்காக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். நெய்மார் கேப்டன் பதவிலியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து டேனி அல்வேஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!
-
3.5 லட்ச அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக.. காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்!
-
ஒன்றிய அரசின் கருப்பு சட்டத்தை எதிர்ப்போம்: இரகுமான் கான் நூல்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் சூளுரை!