Sports
இன்று தொடங்குகிறது உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா : கோப்பையை வெல்ல போவது யார் ?
12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடக்கிறது. கிரிக்கெட் விளையாட்டின் மிகப்பெரிய தொடராக கருதப்படும் உலகக்கோப்பை தொடர் இன்று (30ம் தேதி) தொடங்கி ஜூலை மாதம் 14ம் தேதி வரை நடக்கிறது.46 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்த முறை போட்டி அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோத வேண்டும். ‘லீக் சுற்று’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும். ‘லீக்சுற்று ’ போட்டிகள் ஜூலை 6ம் தேதியுடன் முடிகிறது. முதல் அரையிறுதி ஜூலை 9ம் தேதியும், 2-வது அரைஇறுதி ஜூலை 11ம் தேதியும், இறுதிப் போட்டி ஜூலை 14ம் தேதியும் நடக்கிறது.
இன்று நடைபெறும் உலகக்கோப்பையில் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.இரு அணியும் சமபலம் பொருந்தியவை என்பதால் உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டமே மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை நடைபெற்ற 11 உலகக்கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலியா 5 முறையும், வெஸ்ட்இண்டீஸ், இந்தியா அணிகள் தலா 2 தடவையும், பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா 1 முறையும் உலகக்கோப்பையை வென்றுள்ளன. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் இதுவரை உள்கோப்பையை வென்றதில்லை.
இந்திய அணி 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலும், 2011ம் ஆண்டு டோனி தலைமையிலும் உலகக்கோப்பையை கைப்பற்றியது. விராட் கோலி தலைமையில் தற்போது 3ம் முறையாக உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை ஜூன் 5ம் தேதி எதிர்கொள்கிறது.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!