Sports
இந்திய பவுலர்கள் எப்படிப்பட்ட சூழலிலும் சிறப்பாக பந்துவீசுவார்கள்-ரவி சாஸ்திரி புகழாரம் !
உலகக் கோப்பை தொடர் மே 30-ம்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி இன்றிரவு இங்கிலாந்து புறப்பட்டுச் செல்கிறது. அதற்கு முன்பாக கேப்டன் கோலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் செய்தியாளர்களை இன்று சந்தித்தனர்.
பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறும்போது," உலகக்கோப்பை தொடரில் இந்திய விக்கெட் கீப்பர் தோனியின் பங்கு மிகப்பெரியது. 50 ஓவர் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்ச இதுவரை யாரும் இல்லை. அவரின் சின்ன சின்ன செயல்பாடு கூட போட்டியின் போக்கை மாற்றிவிடும். உலகக்கோப்பை மிகப்பெரிய சவாலான தொடர் தான். ஆனால் இந்திய அணி வீரர்கள் தங்களின் இயல்பான விளையாட்டை வெளிப்படுத்தினாலே, உலகக்கோப்பை நம் நாட்டில் இருக்கும். இந்திய பவுலர்கள் எப்படிப்பட்ட சூழலிலும் சிறப்பாக பந்துவீசும் திறன் கொண்டவர்கள். இத்தொடருக்கு நாங்கள் முழுமையாக தயாராக உள்ளோம்' என்றார்.
Also Read
-
சட்டம் ஒழுங்கு பற்றிப் பேச என்ன யோக்கியதை உண்டு? : பழனிசாமி ஆட்சியின் அவலங்களை நினைவூட்டிய முரசொலி!
-
“கருப்பு, சிவப்பு, நீலம் கொள்கைகள் மதவாதத்தை வீழ்த்தும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
“ரயில் திட்டங்களில் தமிழ்நாடு முழுமுற்றாக புறக்கணிப்பு” : சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்!
-
பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்துள்ள ஒன்றிய அரசு : மெட்ரோ முதல் நிதிப்பகிர்வு வரை பெரும் ஏமாற்றம்!
-
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை - ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!