Sports
இந்திய பவுலர்கள் எப்படிப்பட்ட சூழலிலும் சிறப்பாக பந்துவீசுவார்கள்-ரவி சாஸ்திரி புகழாரம் !
உலகக் கோப்பை தொடர் மே 30-ம்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி இன்றிரவு இங்கிலாந்து புறப்பட்டுச் செல்கிறது. அதற்கு முன்பாக கேப்டன் கோலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் செய்தியாளர்களை இன்று சந்தித்தனர்.
பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறும்போது," உலகக்கோப்பை தொடரில் இந்திய விக்கெட் கீப்பர் தோனியின் பங்கு மிகப்பெரியது. 50 ஓவர் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்ச இதுவரை யாரும் இல்லை. அவரின் சின்ன சின்ன செயல்பாடு கூட போட்டியின் போக்கை மாற்றிவிடும். உலகக்கோப்பை மிகப்பெரிய சவாலான தொடர் தான். ஆனால் இந்திய அணி வீரர்கள் தங்களின் இயல்பான விளையாட்டை வெளிப்படுத்தினாலே, உலகக்கோப்பை நம் நாட்டில் இருக்கும். இந்திய பவுலர்கள் எப்படிப்பட்ட சூழலிலும் சிறப்பாக பந்துவீசும் திறன் கொண்டவர்கள். இத்தொடருக்கு நாங்கள் முழுமையாக தயாராக உள்ளோம்' என்றார்.
Also Read
-
இந்தியாவிலேயே முதல்முறை... மின்னணு விளையாட்டு போட்டிகளை நடத்தி அசத்திய தமிழ்நாடு அரசு !
-
பாலஸ்தீன முக்கிய தலைவரை விடுவிக்க மறுத்த இஸ்ரேல்... யார் இந்த மர்வான் பர்ஹாட்டி !
-
“கலை என்பது சமுதாய வளர்ச்சிக்கு பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
இந்தியாவிலேயே முதல்முறை... சர்வதேச தரத்தில் கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம்: திறந்து வைத்தார் முதல்வர்!
-
“ஜி.டி.நாயுடுவை யாரும் நாயுடுவாக பார்க்கவில்லை...” - விமர்சனங்களுக்கு கி.வீரமணி பதிலடி!