Sports
இந்திய பவுலர்கள் எப்படிப்பட்ட சூழலிலும் சிறப்பாக பந்துவீசுவார்கள்-ரவி சாஸ்திரி புகழாரம் !
உலகக் கோப்பை தொடர் மே 30-ம்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி இன்றிரவு இங்கிலாந்து புறப்பட்டுச் செல்கிறது. அதற்கு முன்பாக கேப்டன் கோலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் செய்தியாளர்களை இன்று சந்தித்தனர்.
பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறும்போது," உலகக்கோப்பை தொடரில் இந்திய விக்கெட் கீப்பர் தோனியின் பங்கு மிகப்பெரியது. 50 ஓவர் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்ச இதுவரை யாரும் இல்லை. அவரின் சின்ன சின்ன செயல்பாடு கூட போட்டியின் போக்கை மாற்றிவிடும். உலகக்கோப்பை மிகப்பெரிய சவாலான தொடர் தான். ஆனால் இந்திய அணி வீரர்கள் தங்களின் இயல்பான விளையாட்டை வெளிப்படுத்தினாலே, உலகக்கோப்பை நம் நாட்டில் இருக்கும். இந்திய பவுலர்கள் எப்படிப்பட்ட சூழலிலும் சிறப்பாக பந்துவீசும் திறன் கொண்டவர்கள். இத்தொடருக்கு நாங்கள் முழுமையாக தயாராக உள்ளோம்' என்றார்.
Also Read
-
அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் : தேர்வு குழுவினருக்கு பதிலடி கொடுத்த நடராஜன் !
-
ஆந்திராவில் பா.ஜ.க கூட்டணியில் பிளவு? : பிரதமர் மோடியின் பேச்சால் வந்த சிக்கல்!
-
உணவக உரிமையாளரை தாக்கிய பா.ஜ.க நிர்வாகி கைது : போலிஸ் அதிரடி
-
போலிஸ் பாதுகாப்பிற்கு ஆசைப்பட்டுப் பொய் புகார் : வசமாகச் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி!
-
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!