Sports
உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு வந்த சிக்கல் !
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ அண்மையில் அறிவித்தது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உலகக்கோப்பையில் விளையாட இந்திய அணி மே 22ஆம் தேதி ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் புறப்படுவதாக திட்டமிட்டிருந்தது. கடுமையான நிதிச்சுமை காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அண்மையில் சேவையை முழுமையாக நிறுத்திய நிலையில், வீரர்கள் இங்கிலாந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கு பதில் அளித்துள்ள ஏர்வேஸ் நிறுவனம், வீரர்கள் செல்வதில் ஏதும் தாமதம் ஏற்படாது என தெரிவித்துள்ளது. இந்திய அணி, முதல் பயிற்சி போட்டியில் நியூசிலாந்துடன் மே 25ஆம் தேதி விளையாடுகிறது.
Also Read
-
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !
-
SIR-க்கு ஆதரவு : தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த பழனிசாமி கும்பல்- திமுக IT Wing விமர்சனம்!
-
"மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
-
"வாக்குரிமையை பறிக்கும் SIR சதித் திட்டத்திற்கு எதிராக போராடிடுவோம்" - திமுக கூட்டணிக் கட்சிகள் அழைப்பு !
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!