Sports
உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு வந்த சிக்கல் !
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ அண்மையில் அறிவித்தது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உலகக்கோப்பையில் விளையாட இந்திய அணி மே 22ஆம் தேதி ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் புறப்படுவதாக திட்டமிட்டிருந்தது. கடுமையான நிதிச்சுமை காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அண்மையில் சேவையை முழுமையாக நிறுத்திய நிலையில், வீரர்கள் இங்கிலாந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கு பதில் அளித்துள்ள ஏர்வேஸ் நிறுவனம், வீரர்கள் செல்வதில் ஏதும் தாமதம் ஏற்படாது என தெரிவித்துள்ளது. இந்திய அணி, முதல் பயிற்சி போட்டியில் நியூசிலாந்துடன் மே 25ஆம் தேதி விளையாடுகிறது.
Also Read
-
“எங்களை விமர்சனம் செய்தவர்களுக்கான பதில்தான் இது!” : ‘செயலாக்க’ மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
“திராவிட மாடல் ஆட்சியில் 1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!
-
2 சூப்பர் ஓவர்கள்… இறுதியில் நடந்த சுவாரசியம்!: ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைத்த போட்டி!
-
“பா.ஜ.க. அரசு கார்ப்பரேட்டுகளுக்காக கார்ப்பரேட்டுகளால் ஆளப்படும் கார்ப்பரேட் அரசாங்கம்” - முரசொலி!
-
“பாஜக டப்பா எஞ்சின் முன், திராவிட மாடல் Superfast Engine தலைகுனியாது!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!