Sports
உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு வந்த சிக்கல் !
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ அண்மையில் அறிவித்தது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உலகக்கோப்பையில் விளையாட இந்திய அணி மே 22ஆம் தேதி ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் புறப்படுவதாக திட்டமிட்டிருந்தது. கடுமையான நிதிச்சுமை காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அண்மையில் சேவையை முழுமையாக நிறுத்திய நிலையில், வீரர்கள் இங்கிலாந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கு பதில் அளித்துள்ள ஏர்வேஸ் நிறுவனம், வீரர்கள் செல்வதில் ஏதும் தாமதம் ஏற்படாது என தெரிவித்துள்ளது. இந்திய அணி, முதல் பயிற்சி போட்டியில் நியூசிலாந்துடன் மே 25ஆம் தேதி விளையாடுகிறது.
Also Read
-
“இதுதான் சரியான தருணம்!” : திமுக-விற்கான மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!
-
“6 மாதம் பொறுத்திருந்தால், பறிபோன உயிர்களைத் திருப்பித்தருவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?” : தி.மு.க கேள்வி!
-
மறைமுகமாக போதைப் பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கிறாரா விஜய்? : தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“கொடூரமான குற்றங்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது” : பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
9-ஆம் வகுப்பு பாடத்தில் மனுஸ்மிருதி : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்!