Sports
IPL 2019 : தொடர் தோல்வியிலிருந்து மீண்டெழுமா கொல்கத்தா அணி ?
ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்றிரவு நடைபெறும் போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.
கொல்கத்தா அணி 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. ஏற்கனவே பெங்களூர் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இருந்ததால் மீண்டும் தோற்கடித்து 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. கொல்கத்தா அணி தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் தோற்றது. அந்த தோல்வியில் இருந்து மீளுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்த்ரே ரஸ்சல், கிறிஸ் லின், நிதிஷ் ரானா போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும், சுனில் நரீன், பியூஸ் சாவ்லா போன்ற சிறந்த பவுலர்களும் கொல்கத்தாவில் உள்ளனர்.
பெங்களூர் அணி 1 வெற்றி, 7 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பை பெற அந்த அணிக்கு மிகவும் கடினமே. எஞ்சிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.
அந்த அணி பஞ்சாப்பை மட்டும் 8 விக்கெட்டில் வென்றது. மும்பையிடம் 2 முறையும் , சென்னை, ஐதராபாத் , ராஜஸ்தான், கொல்கத்தா , டெல்லி ஆகியவற்றிடம் ஒருமுறையும் தோற்றது. விராட்கோலி , டிவில்லியர்ஸ் , சாஹல் போன்ற சிறந்த வீரர்கள் இருந்தும் பெங்களூர் அணி முன்னேற்றம் அடையாமல் இருப்பது பரிதாபமே.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!