Sports
சென்னை அணியிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்
ஐ.பி.எல் தொடர் இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் கடந்த 23 ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது.இதுவரை அனைத்து அணிகளும் போட்டிகளில் விளையாடி உள்ளது.
தோணி தலைமையிலான சென்னை அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வென்று இரண்டாமிடத்தில் உள்ளது.நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ,சென்னை அணியும் ராஜஸ்தான் அணியதுடன் மோதுகிறது.சென்னை வீரர்கள் இதற்காக சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில்,சென்னை அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லி தனது சொந்த வேலை காரணமாக ஐ.பி.எல் தொடரிலிருந்து முழுவதும் விலகுவதாக தெரிவித்துள்ளார்.அவருக்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதால் ,அவரால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி விலகிய நிலையில் மற்றோரு வீரர் விலகியிருப்பது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஜவுளி ஏற்றுமதி : குஜராத்தை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முதலிடம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
“தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால்; தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள்!” - முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
‘கொடநாடு’ என்று சொன்னாலே குலை நடுக்கம் ஏற்படும் பழனிசாமிக்கு! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!