Sports
சென்னை அணியிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்
ஐ.பி.எல் தொடர் இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் கடந்த 23 ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது.இதுவரை அனைத்து அணிகளும் போட்டிகளில் விளையாடி உள்ளது.
தோணி தலைமையிலான சென்னை அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வென்று இரண்டாமிடத்தில் உள்ளது.நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ,சென்னை அணியும் ராஜஸ்தான் அணியதுடன் மோதுகிறது.சென்னை வீரர்கள் இதற்காக சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில்,சென்னை அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லி தனது சொந்த வேலை காரணமாக ஐ.பி.எல் தொடரிலிருந்து முழுவதும் விலகுவதாக தெரிவித்துள்ளார்.அவருக்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதால் ,அவரால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி விலகிய நிலையில் மற்றோரு வீரர் விலகியிருப்பது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“எப்போதும் இனிய முகத்துடனும், கனிவான பேச்சுடனும் காணப்படுபவர் சரோஜாதேவி..” - முதலமைச்சர் இரங்கல்!
-
அடுத்தடுத்த நாளில் 2 துயரம்.. நாடோடி மன்னன் முதல் ஆதவன் வரை... பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்!
-
"கழக அரசின் சாதனைகளை, மக்களை ஞாபகப்படுத்திக் கொண்டே இருங்கள்"... துணை முதலமைச்சர் உதயநிதி வேண்டுகோள் !
-
தெற்கு ரயில்வேயின் அலட்சியத்தால் பறிபோன 3 உயிர்கள்... கேட்டை மூடாதது யார் தவறு? - முரசொலி விமர்சனம் !
-
"வள்ளுவரை திருடப்பார்க்கிறர்கள், வள்ளுவரின் வெப்பம் அவர்களை பொசுக்கிவிடும்" - முதலமைச்சர் ஆவேசம் !