Sports
சென்னை அணியிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்
ஐ.பி.எல் தொடர் இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் கடந்த 23 ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது.இதுவரை அனைத்து அணிகளும் போட்டிகளில் விளையாடி உள்ளது.
தோணி தலைமையிலான சென்னை அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வென்று இரண்டாமிடத்தில் உள்ளது.நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ,சென்னை அணியும் ராஜஸ்தான் அணியதுடன் மோதுகிறது.சென்னை வீரர்கள் இதற்காக சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில்,சென்னை அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லி தனது சொந்த வேலை காரணமாக ஐ.பி.எல் தொடரிலிருந்து முழுவதும் விலகுவதாக தெரிவித்துள்ளார்.அவருக்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதால் ,அவரால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி விலகிய நிலையில் மற்றோரு வீரர் விலகியிருப்பது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!