Sports
சென்னை அணியிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்
ஐ.பி.எல் தொடர் இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் கடந்த 23 ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது.இதுவரை அனைத்து அணிகளும் போட்டிகளில் விளையாடி உள்ளது.
தோணி தலைமையிலான சென்னை அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வென்று இரண்டாமிடத்தில் உள்ளது.நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ,சென்னை அணியும் ராஜஸ்தான் அணியதுடன் மோதுகிறது.சென்னை வீரர்கள் இதற்காக சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில்,சென்னை அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லி தனது சொந்த வேலை காரணமாக ஐ.பி.எல் தொடரிலிருந்து முழுவதும் விலகுவதாக தெரிவித்துள்ளார்.அவருக்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதால் ,அவரால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி விலகிய நிலையில் மற்றோரு வீரர் விலகியிருப்பது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!