Sports
ஐ.பி.எல் 2019; பஞ்சாப்புடன் மல்லுக்கட்டும் மும்பை
ஐ.பி.எல் தொடரின் 12வது சீசன் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.இன்று (30.03.19) இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது மாலை 4 மணிக்கு மொஹாலியில் நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.இரு அணிகளும் தலா இரு போட்டிகளில் விளையாடி ஒன்றில் வென்றுள்ளது.
மும்பை அணி தனது கடைசி போட்டியில் பெங்களூரு அணியை கடைசி பந்தில் வெற்றி பெற்றது.எனவே இந்த போட்டியில் வெற்றியை தொடர மும்பை முனைப்பில் இருக்கும்.பஞ்சாபி அணி தனது கடைசி போட்டியில் கொல்கத்தாவிடம் தோல்வி அடைந்தது.மீண்டும் வெற்றிபி பாதைக்கு திரும்ப பஞ்சாப் முயற்சிக்கும்.எனவே,இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.இது வரை இரு அணிகளும் 22 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.அதில் 12 போட்டிகளில் மும்பை அணியும் 10 போட்டிகளில் வென்றுள்ளது.
இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் போட்டியில் டெல்லி அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன.கொல்கத்தா விளையாடிய 2 ஆட்டங்களிலும் வென்று முதலிடத்தில் உள்ளது.டெல்லி அணி ஆடிய 2 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றியும்,ஒன்றில் தோல்வியும் சந்தித்துள்ளது.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!