Politics
“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்.. பிரம்மாண்ட விழா.. கழகத்தில் இணைந்த 5,000 மாற்றுக் கட்சியினர்”
சென்னை, வானகரம் ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில் இன்று (ஜூன் 28) திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில், முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் ஏற்பாட்டில், மாற்றுக் கட்சியினர் 5,000 பேர் திமுக-வில் இணையும் விழா நடைபெற்றது.
ஏற்கனவே அண்ணா அறிவாலயத்தில் கழகத் தலைவர் முன்னிலையில் திமுக உறுப்பினராக தன்னை சேர்த்துக்கொண்ட முன்னாள் அதிமுக அமைச்சர் பெஞ்சமின், இன்று மிகப்பெரிய இணைப்பு விழாவை நடத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் 5,000 பேர் தங்களை திமுக-வில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கழக முன்னணித் தலைவர்கள் பங்கேற்றனர். மாற்றுக் கட்சியினர் உற்சாகத்துடன் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்ட நிலையில், அவர்களை வரவேற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
ஆளும் கட்சியை நோக்கி குதிரை பேரம் நடத்தி பல்வேறு எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதிவியைத் துறந்து பணத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு சென்றாலும், என்றும் கழகத்தையும் மக்களுக்காக உழைக்கும் திமுக என்ற இயக்கத்தை நம்பியும் மாற்றுக் கட்சியினர் இணைந்து வருகின்றனர்.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கழகம் என்றுமே மக்களுக்காக இயங்கக் கூடியது என்பது இது போன்ற நிகழ்வுகளால் மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகிக் கொண்டே உள்ளது.
Also Read
-
“ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்.. கட்டாயப் படுத்தப்பட்டாரா?” - முழு விவரம் அறிய!
-
“எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்.. உடன்பிறப்புக்களே தயாராகுங்கள்” - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தவெக அமைச்சர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய சபரீசன்... 15 நாட்கள் மட்டுமே கெடு... விவரம் உள்ளே!
-
போதை பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ : தவெக அமைச்சருக்கு எதிராக களமிறங்கும் திமுக மாணவர் அணி !
-
கடலூர் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி... ஒரே வாரத்தில் 2 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு!