Politics
"தியாகராயரின் திராவிட இயக்க லட்சியங்களை வென்றெடுக்க அயராது உழைப்போம்" - துணை முதலமைச்சர் உதயநிதி !
நீதிக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான சர் பிட்டி தியாகராயரின் பிறந்தநாள்விழாவை முன்னிட்டு அவரின் புகழை பல்வேறு அரசியல் தலைவர்களில் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சர் பிட்டி தியாகராயரின் திராவிட இயக்க லட்சியங்களை வென்றெடுக்க அயராது உழைப்போம் என துணை முதலலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "ஆயிரமாயிரம் ஆண்டுகள் அடிமைகளாய் வாழ்ந்திருந்த திராவிடர்களை உயர்த்திட தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை நிறுவிய சர் பிட்டி தியாகராயர் அவர்களின் பிறந்த நாள் இன்று!தென்னிந்திய நல உரிமைச் சங்கமே, அது நடத்திய இதழின் பெயரால் 'நீதிக்கட்சி' என்றானது வரலாறு.
சமூகத்தில் நிலவிய சாதிய ஏற்றத்தாழ்வுக்கு எதிராக Non-Brahmin Manifesto-வை வெளியிட்டு பல்வேறு சீர்திருத்தங்களை செயலாக்கிக் காட்டியவர். பிற்படுத்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி - வேலைவாய்ப்பு போன்றவற்றில் முன்னேற வேண்டும் என்று தன் வாழ்நாளெல்லாம் உழைத்தவர் நம் தியாகராயர் அவர்கள்.
எல்லோருக்கும் - எல்லாம் எனும் திராவிட மாடல் தத்துவத்துக்கான விதையை தூவிய பிட்டி தியாகராயர் அவர்களின் புகழ் ஓங்கட்டும்!அவர் காட்டிய வழியில் திராவிட இயக்க லட்சியங்களை வென்றெடுக்க அயராது உழைப்போம்"என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
“குஜராத் மோடியா? இந்த லேடியா?” என்று சவால்விட்டவர் மீது மோடிக்கு திடீர் பாசம்! : முதலமைச்சர் விமர்சனம்!
-
நடிகர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய மனைவி சங்கீதா! : காரணத்தைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி!
-
கோவை : தந்தை பெரியார் நூலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு - பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு!
-
“குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்த இந்தியா… வெளியேறிய ஜிம்பாப்வே அணி… இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்!