Politics
100 நாள் வேலைத்திட்டம்: “உங்க கூட்டணி பாஜகவை ரூ.4000 கோடி நிலுவையை கொடுக்க சொல்லுங்கள்” -அமைச்சர் பதிலடி!
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில், அதிமுக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
அந்த வகையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி, 100 நாள் வேலைத் திட்டம் ஊதியம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, 100 நாள் வேலைத்திட்டத்தில் ஒன்றிய அரசு ரூ.4000 கோடி ரூபாய் விடுவிக்க வேண்டும் .ஒன்றிய அரசு விடுவித்தால் உடனடியாக ஊதியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று பதிலளித்தார்.
இதுகுறித்து பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அளித்த பதில் வருமாறு :
100 நாள் வேலைத்திட்டத்திற்கு ஊதியம் 100% ஒன்றிய அரசு கொடுக்க வேண்டும். அதில் கிட்டத்தட்ட ரூ.4000 கோடி நிலுவையில் உள்ளது. ஒன்றிய அரசு ஊதிய தொகை கொடுத்துவிட்டால் உடனடியாக 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் வழங்கப்படும்.
2025- 2026 -ஆண்டும் மொத்தம் 12 நாட்களுக்குதான் ஒதுக்கி இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்ல, இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களுக்கும் வேலை உறுதி நாட்களை மனித சக்தி நாட்களை குறைத்து இருக்கிறது. 100 நாள் வேலைத் திட்டம் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில், ஒன்றிய அரசு நேரடியாக வங்கிகள் ஊதியம் செலுத்துக்கிறது. நீங்கள்தான் (அதிமுக) கூட்டணி வைத்து உள்ளீர்களே, அவர்களிடம் சொல்லி தமிழ்நாட்டுக்கான தொகையை கொடுக்க சொல்லுங்களேன்!
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!