Politics
" நாடாளுமன்ற தொகுதிகள் சீரமைப்பு தென்மாநிலங்களுக்கு அப்பட்டமான அநீதி" - கர்நாடக முதல்வர் விமர்சனம் !
கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் மக்கள் தொகையை வெகுவாக குறைந்துள்ள நிலையில், வடமாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதனிடையே 2026-ஆம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில், மக்களவைத் தொகுதிகளை ஒன்றிய அரசு மறுசீரமைப்பு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு நடைபெற்றால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கான நாடாளுமன்ற இடங்கள் வெகுவாக குறையும் சூழல் ஏற்படும். இதனால் தென்மாநிலங்களின் அதிகாரம் வெகுவாக குறைந்து விடும். இதனை குறிப்பிட்டு இந்த இடர்பாடுகளை எதிர்கொள்வதற்கு அனைத்து கட்சிகளின் ஆதரவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரியுள்ளார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற தொகுதிகள் சீரமைப்பு அப்பட்டமான அநீதி என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "தொகுதி மறு சீரமைப்பு மக்கள்தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையில் இருக்குமா அல்லது தற்போதைய மக்களவை இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இருக்குமா என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். மக்கள்தொகை அடிப்படையில் இருக்குமானால், அது நிச்சயமாக தென் மாநிலங்களைப் பாதிக்கும். வடக்கு மாநிலங்கள் வளர்ச்சியை எட்டவும், மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும் தவறிய நிலையில், தென் மாநிலங்கள் சிறப்பாக மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியிருக்கின்றது.
வரலாற்றுப்பூர்வமாக இந்த பிரச்னையைத் தவிர்க்க 1971 மக்கள்தொகை அடிப்படையிலேயே தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்திய மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற இருக்கைகள் ஒதுக்கப்பட்டால் கர்நாடகாவின் தொகுதிகள் எண்ணிக்கை 28லிருந்து 26-ஆக குறையும். ஆந்திர பிரதேசத்தின் தொகுதிகள் எண்ணிக்கை 42லிருந்து 34-ஆக குறையும். கேரளாவின் தொகுதிகள் எண்ணிக்கை 20லிருந்து 12-ஆக குறையும். தமிழ்நாட்டின் எண்ணிக்கை 34 -ஆக குறையும்.
ஆனால் உத்தரபிரதேசத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை 80லிருந்து 91-ஆகவும், பீகாரில் 40லிருந்து 50 -ஆகவும் மத்திய பிரதேசத்தில் 29லிருந்து 33 ஆகவும் உயரும். இது அப்பட்டமான அநீதி என்றும் இதைப் பொருத்துக்கொள்ள முடியாது. 1971 மக்கள்தொகைப்படி அல்லது தெற்கு மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவத்தைக் குறைக்காமல் மறுசீரமைப்பு நடைபெற வேண்டும்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!
-
ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் கடன் மதிப்பு ரூ.200 லட்சம் கோடியாக உயர்வு! : வெளியான அதிர்ச்சி தகவல்!
-
மின்கழிவுகள் மூலம் ஈட்டிய GST தொகை எவ்வளவு? : நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா MP கேள்வி!