Politics
ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க வெற்றி : முதலமைச்சர் முன்னிலையில் பதவியேற்றார் வி.சி.சந்திரகுமார்!
தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் வி.சி.சந்திரகுமார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலில் தி.மு.க சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிட்டார். எதிர்த்து போட்டியிடாமல் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில், 91 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் தி.மு.க வேட்பாளர் வி.சி.சந்திரகுமார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் கூட வாங்காமல் போனது, தி.மு.க.விற்கு பெரும் வெற்றியாக அமைந்தது.
வெற்றி வாகை சூடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.விற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர் பாராட்டுகளை பதிவு செய்தனர்.
இந்நிலையில், இன்று (பிப்ரவரி 10) சட்டப்பேரவை வளாகத்தில் சபாநாயகர் அப்பாவு, வி.சி.சந்திரகுமார் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்க, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்களும், கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.
Also Read
-
“சபரிவர்மனின் மர*த்துக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
-
திருமணமான பெண்ணுக்கு 3 மாதங்களாக பாலியல் தொல்லை.. தவெக நிர்வாகிக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!
-
கொத்தடிமை ஒப்பந்தம்: ஆத்தூர் நகராட்சியின் அராஜகத்தை வேடிக்கை பார்க்கும் தவெக அரசுக்கு DMK IT WING கண்டனம்
-
த.வெ.க அரசு என்ன டாஷ் பண்ணிட்டு... : பழனி கோயில் நிலம் குறைகேடு விவகாரம் - DMK IT WING கண்டனம்!
-
மலையடிப்பட்டி அகழாய்வுப் பணிகளை தொடர வேண்டும் : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்!