Politics
குடியரசுத்தலைவர் உரையில் இடம் பெறாத ’சோசலிஸ்ட்’, ’மதச்சார்பற்ற’ சொற்கள் : டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு!
இந்திய அரசமைப்புச்சட்டத்தின் 75வது ஆண்டு விழாவையொட்டி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ஆற்றிய உரை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என சபாநாயகருக்கு மக்களவை திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு டி.ஆர்.பாலு எழுதி உள்ள கடிதத்தில், இந்திய அரசமைப்புச்சட்டத்தின் 75வது ஆண்டு விழாவையொட்டி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ஆற்றிய உரை, நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் அரசியலமைப்பு விழுமியங்களை பரப்பும் நோக்கத்தில் ஒரு தனித்துவமான, குறிப்பிடத்தக்க நிகழ்வாகும் என்றும், குடியரசுத்தலைவரின் உரையின் உள்ளடக்கத்தை நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒன்றிய அரசால் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட குடியரசுத்தலைவரின் உரையில், "சோசலிஸ்ட்" மற்றும் "மதச்சார்பற்ற" என்ற சொற்கள் உட்பட அரசியலமைப்பின் சில முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்படவில்லை என்பதை பலரும் சுட்டிக்காட்டி உள்ளதாக டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
குடியரசுத்தலைவரின் உரை குறித்து நாட்டு மக்களுக்கு தெளிபடுத்தும் வகையில், அதனை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பது நாடாளுமன்ற நடைமுறையில் உள்ளதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள டி.ஆர்.பாலு, இதற்கான விவாதத்தை மக்களவை நிகழ்ச்சிக் குறிப்பில் இணைக்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!