Politics
ஒன்றிய, மாநில பாஜக அரசுகளை முழு அடைப்பு போராட்டம் : மணிப்பூரில் மூடப்பட்ட கடைகள் !
மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்னர் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் மெய்தி சமூகத்தினர், குக்கி பழங்குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
இந்த வன்முறையை பாஜக அரசு கண்டும் காணாததுமாய் இருந்து வந்தது. இந்த வன்முறையில் நூற்றுக்கணக்கானொர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இப்படி ஒரு கொடூர வன்முறை நடந்த பின்னரும் பிரதமர் மோடி இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை. மேலும், அங்குள்ள பாஜக அரசும் இதுவரை கலைக்கப்படவில்லை.
இந்த வன்முறை இடையில் சற்று ஓய்ந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் பெரிய அளவில் வன்முறை உருவானது. இது இந்திய அளவில் அதிர்ச்சி அளித்தது. எனினும் மாநில, ஒன்றிய பாஜக அரசுகள் சார்பில் வன்முறையை நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், மணிப்பூரில் ஒன்றிய, மாநில பாஜக அரசுகளை கண்டித்து மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பாஜக ஆளும் மணிப்பூரில் மீண்டும் வன்முறை அதிகரித்துள்ள நிலையில், இதனை தடுக்க தவறிய ஒன்றிய, மாநில பாஜக அரசுகளை கண்டித்து 24 மணி நேர பந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி நேற்று மாலை 6 மணி முதல் இன்று மாலை 6 மணி வரை 24 மணி நேர முழு அடைப்பு போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மணிப்பூரின் 13 அமைப்புகள் சார்பில் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!