Politics
தெலங்கானாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து : மோடி ஆட்சியில் சீரழிவை சந்திக்கும் ரயில்வே துறை !
கர்நாடகத்திலிருந்து உத்தரப்பிரதேசத்தை நோக்கி இரும்பு லோடு ஏற்றி சென்ற சரக்கு ரயில் தெலங்கானாவில் ராகவாபுரம் மற்றும் ராமகுண்டம் இடையே சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது இன்று நள்ளிரவுவில் திடீரென சரக்கு ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.
கிராண்ட் ட்ரஙக் ரூட் என சொல்லப்படும் டெல்லி-சென்னை முக்கிய ரயில் வழித்தடத்தில் விபத்து ஏற்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு அப்பகுதியில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் ரயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் வடமாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் விரைவு ரயில்கள் வந்தடைய தாமதம் ஏற்பட்டுள்ளது.விரைவு ரயில் வருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும், தினம் ஒரு ரயில் விபத்து என்ற அளவில் தொடர்ந்து ரயில் விபத்துக்கள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசு உரிய கவனம் செலுத்தி ரயில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!