Politics
தெலங்கானாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து : மோடி ஆட்சியில் சீரழிவை சந்திக்கும் ரயில்வே துறை !
கர்நாடகத்திலிருந்து உத்தரப்பிரதேசத்தை நோக்கி இரும்பு லோடு ஏற்றி சென்ற சரக்கு ரயில் தெலங்கானாவில் ராகவாபுரம் மற்றும் ராமகுண்டம் இடையே சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது இன்று நள்ளிரவுவில் திடீரென சரக்கு ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.
கிராண்ட் ட்ரஙக் ரூட் என சொல்லப்படும் டெல்லி-சென்னை முக்கிய ரயில் வழித்தடத்தில் விபத்து ஏற்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு அப்பகுதியில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் ரயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் வடமாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் விரைவு ரயில்கள் வந்தடைய தாமதம் ஏற்பட்டுள்ளது.விரைவு ரயில் வருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும், தினம் ஒரு ரயில் விபத்து என்ற அளவில் தொடர்ந்து ரயில் விபத்துக்கள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசு உரிய கவனம் செலுத்தி ரயில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Also Read
-
விபரீதமான விளையாட்டு... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 பள்ளி மாணவர்கள் கைது.. கள்ளக்குறிச்சியில் பரபர!
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!
-
“24 மணி நேரத்தில் 8 கொலைகள்.. தினமும் எகிறும் Crime Rate” : தவெக அரசுக்கு கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!
-
எழுச்சியுடன் நடந்த திமுக முப்பெரும் விழா.. விருதுகளை வழங்கி சிறப்பித்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!