Politics
தெலங்கானாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து : மோடி ஆட்சியில் சீரழிவை சந்திக்கும் ரயில்வே துறை !
கர்நாடகத்திலிருந்து உத்தரப்பிரதேசத்தை நோக்கி இரும்பு லோடு ஏற்றி சென்ற சரக்கு ரயில் தெலங்கானாவில் ராகவாபுரம் மற்றும் ராமகுண்டம் இடையே சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது இன்று நள்ளிரவுவில் திடீரென சரக்கு ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.
கிராண்ட் ட்ரஙக் ரூட் என சொல்லப்படும் டெல்லி-சென்னை முக்கிய ரயில் வழித்தடத்தில் விபத்து ஏற்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு அப்பகுதியில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் ரயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் வடமாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் விரைவு ரயில்கள் வந்தடைய தாமதம் ஏற்பட்டுள்ளது.விரைவு ரயில் வருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும், தினம் ஒரு ரயில் விபத்து என்ற அளவில் தொடர்ந்து ரயில் விபத்துக்கள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசு உரிய கவனம் செலுத்தி ரயில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Also Read
-
5 மாநில தேர்தல் : ஆட்சியை பிடிக்கப்போவது யார்? : வெளியான Exit Polls முடிவுகள்!
-
தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க கூட்டணியே ஆட்சி அமைக்கும்: உறுதி செய்த Exit Polls முடிவுகள்!
-
இஸ்லாமியச் சிறுமிக்கு இந்து பெற்றோர் : உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!
-
பா.ஜ.க ஆளும் மாநிலத்தின் அவலம் - உயிருக்குப் போராடிய கணவர்: மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!
-
”தேர்தல் ஆணையமா ஆளுநர் ஆர்.என்.ரவி.. அமைதியாக நடக்கிறதா மேற்கு வங்க தேர்தல்?” : முரசொலி கேள்வி!