Politics
உடனடியாக ரூ.1.57 கோடி GST கட்டுங்க - திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோயிலுக்கு ஒன்றிய அரசு நோட்டீஸ் !
மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எல்லா பொருட்கள் மீதும் ஜி.எஸ்.டி வரியை விதித்து வருகிறது. இதனால் உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவது சாமானிய மக்களைப் பாதித்துள்ளது.
தற்போது இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வரும் நிலையில், அரசி, பருப்பு, பால் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது. மேலும் பல பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரியை அதிகரித்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள்களின் விளையும் அதிகளவில் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், பிரபலமான திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோயிலுக்கு ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி. நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஒன்றிய அரசு சார்பில் அனுப்பட்ட ஜி.எஸ்.டி. நோட்டீசில கோவில் வருமானத்துக்காக 1.57 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளது.
கோயில் சொத்துக்களின் வாடகை, சிற்பங்கள், இதர பொருள்களின் விற்பனை, கோயில் யானைகளை வாடகைக்கு விடுவது போன்ற வருவாய்க்கு 1.57 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும் என்றும், ஜி.எஸ்.டி நிலுவை தொகையை செலுத்தாவிட்டால் 100% அபராதம், 18% வட்டி செலுத்த நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. '
அதே நேரம் முறையான கணக்குகள் படி 16 லட்சம் ரூபாய்தான் செலுத்த வேண்டும். அதில்3 லட்சம் ரூபாய் ஏற்கனவே செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. கோவில் வருமானத்துக்கு கூட ஜி.எஸ்.டி. கட்டவேண்டும் என்றும் ஒன்றிய நோட்டீஸ் அனுப்பிய ஒன்றிய அரசின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!