Politics
“ஆதவ் அர்ஜுனின் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து, அது விசிகவுக்கு ஏற்புடையதல்ல” - வன்னியரசு விளக்கம் !
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா என்பவர் துணை முதல்வர் குறித்து சர்ச்சைக்குறிய கருத்துக்களைத் தெரிவித்தார். இது அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கருத்து தெரிவித்த திமுக துணை தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, “ இடதுசாரி சிந்தனையை தீர்க்கமான ஆழ்ந்த நம்பிக்கை உள்ள தமிழ் மொழி வரலாற்று பின்னணியோடு கூடிய அரசியல் புரிதல் உள்ள திருமாவளவன், நிச்சயமாக இந்த கருத்தை ஏற்க மாட்டார்.
நிச்சயமாக இந்த கருத்துக்கு எதிரான நிலைப்பாட்டை அவர் எடுப்பார். இப்படிப்பட்ட கருத்துக்களை கூறியவர்களை அனுமதிக்க மாட்டார். போதுமான புரிதல் இன்றி வி.சி.க இயக்கத்திற்கு புதிதாக வந்திருக்கும் ஆதவ் அர்ஜூனா, திருமாவின் ஒப்புதலோடு அவர் பேசியிருக்க மாட்டார்.
பகுத்தறிவு, சமூக நீதிக் கொள்கை, மதச்சார்பின்மைக்கு எதிரான கொள்கை, தலித் அரசியலை முன்னெடுத்து, சனாதன தர்மத்திற்கு எதிரான கொள்கைகளை திருமா முழங்குகின்றார். அவர் இந்த கருத்துக்களை ஏற்க மாட்டார், அவர் உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என்று தி.மு.க நம்புகிறது” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, “ துணை முதல்வர் குறித்த ஆதவ் அர்ஜுனின் கருத்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஏற்புடையதல்ல. தனி நபர் மீதான் விமர்சனத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்மொழியாது. ஆதவ் அர்ஜுனின் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து. நாங்கள் திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்” என்று தெரிவித்தார். இதன் மூலம் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.
Also Read
-
ஜூம்லா விடும் மோடி அரசு : “மக்களை என்றைக்காவது மகிழச் செய்தது உண்டா?” - கி.வீரமணி சரமாரி கேள்வி!
-
“ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகளின் உண்மையான இருப்பிடம் தமிழ்மண்ணே!” : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
“இல்லாத கல்வித் தகுதியை பெற்றதாக சொல்லும் கல்வி அமைச்சர் ராஜ்மோகன்!” : சரவணன் அண்ணாதுரை விமர்சனம்!
-
“சங்கரன்கோவில் டூ சுவீடன் - பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்...” : தென்காசி இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
பணியாளரை காலணியால் தாக்கிய DIG.. காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் : தவெக அரசு மீது சீறும் சண்முகம்!