Politics
”அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி” : ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கூறி வரும் கருத்துக்கள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இதற்கிடையே இந்திய அரசியலமைப்பில் பிரதானமான மதச்சார்பின்மை, ஐரோப்பாவில் இருந்து இறக்குமதியானது என்றும் இதனால் இந்தியாவிற்கு மதச்சார்பின்மை தேவையற்றது என ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆளுநரின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள சமூக வலைதளப்பதிவில், அரசமைப்புச் சட்டத்தின் பெயரால் பதவியேற்றுக்கொண்டு, தொடர்ந்து அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவிப்பது அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயல் என அவர் சாடியுள்ளார்.
ஆளுநரின் இந்த நடவடிக்கை ஏற்றுக் கொள்ளமுடியாதது என்றும் இதனால் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் அவரை ஆளுநர் பதவியிலிருந்து ஒன்றிய அரசு நீக்கம் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார். பிரதமர் மோடி எதனைச் செய்ய விரும்புகிறாரோ அதனையே ஆளுநர் ஆர்.என்.ரவி பிரதிபலித்து வருவதாக ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார்.
Also Read
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!
-
டெஸ்ட் போட்டியில் வரலாறு படைத்த வங்கதேசம்.. ஸ்டார்க்கின் அதிரடி.. Come Back கொடுத்த ஆஸ்திரேலியா!
-
தமிழ்நாட்டிற்கான ரூ.2,087 கோடி நிதியை நிலுவையில் வைத்திருக்கும் பாஜக அரசு! : RTI மூலம் வெளியான உண்மை!
-
அருப்புக்கோட்டையில் அரசு அலுவலகங்களை ஆட்டிப்படைக்கும் த.வெ.க.வினர்! : கடும் அதிருப்தியில் மக்கள்!