Politics
PM SHRI திட்டத்தில் கையெழுத்து போட்டால் தான் நிதி : அடாவடிதனம் செய்யும் ஒன்றிய அரசு!
ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டிற்காகு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் வேண்டும் என்றே பழிவாங்கி வருகிறது. ஜி.எஸ்.டி வரி தொடங்கி கல்வி திட்டங்கள் என பல திட்டங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் நிறுத்திவைத்துள்ளது மோடி அரசு.
அதிலும் குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை தமிழ்நாட்டு மக்கள் முற்றிலுமாக புறக்கணித்து விட்டதை அடுத்து ஒன்றிய பட்ஜெட்டில் கூட தமிழ்நாட்டின் பெயரை இடம் பெறாமல் பார்த்துக் கொண்டது. அந்த அளவிற்கு தமிழ்நாட்டின் மீது வன்மத்துடன் ஒன்றிய அரசு நடந்து வருகிறது.
தற்போது PM SHRI திட்டத்தில் கையெழுத்திட்டால்தான் “சமக்ரா சிக்ஷா” என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய முதல் தவணையான ரூ. 573 கோடியை விடுவிப்பேன் என ஒன்றிய அரசு அடம்பிடித்து வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில், “சமக்ரா சிக்ஷா” என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகை ரூ.573யை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
மேலும், ஒரு கொள்கையினை கல்விக்கான நிதி வழங்கிடும் விஷயத்துடன் பொருத்திடக் கூடாது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இருந்தும் ஒன்றிய அமைச்சர் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு கையெழுத்திட வேண்டும் என மீண்டும் வற்புறுத்தியுள்ளார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“இவைதான் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் மோடி செய்யும் தாக்குதல்கள்..” - பட்டியலிட்டு முரசொலி காட்டம்!
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!