Politics
“குறு, சிறு தொழில் முனைவோர்கள் காக்கப்பட வேண்டும்” : SEBI சர்ச்சை குறித்து மல்லிகார்ஜுன கார்கே!
அதானி மீது இருக்கிற மோசடிகளை செபி பெருமளவில் கண்டுகொள்ளாமலும், பல வகையில் அதானியை செபி காப்பதற்கான நடவடிக்கை எடுப்பதில் நாட்டம் காட்டுவதும் ஏன்? என்ற கேள்வி கடந்த ஓர் ஆண்டு காலமாக நீடித்து வந்தது.
எனினும், அதற்கு சரியான விளக்கம் வெளிப்படாமலே நீடித்து வந்தது. இடையே, மோடியின் நண்பர் என்பதால் இவ்வளவு சலுகைகளா என்ற பேச்சும் எழுந்தது.
இந்நிலையில், மோடியின் நண்பர் என்பதற்காக மட்டுமே சலுகைகள் அல்ல. செபி தலைமை பொறுப்பு வகிக்கும், மதாபி பூரி புச்-ம், அதானி மோசடிகளில் கூட்டு தான் என்பது வெளிப்பட்டுள்ளது.
அதானி குழுமங்களில் உள்ள பங்குதாரர்களில், செபி தலைவர் மதாபி பூரியும் ஒருவர், அவரது கணவர் கூட பங்குதாரர் தான் என அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட தகவல் தான் அந்த வெளிப்பாடு. இதனால், இந்திய பொருளாதாரத்தில் வேறென்ன மோசடிகள் நிகழ்ந்து வருகின்றன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இது குறித்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “அதானி மோசடிகளில் தகுந்த விசாரணை நடத்தப்படாததற்கு, செபி தலைமையின் கூட்டு வேலையும் காரணம் என்பது அம்பலப்பட்டுள்ளது. இதனால், நீதி கிடைக்குமா என்ற குழப்பம் எழத்தொடங்கியுள்ளது. செபி அமைப்பை நம்பியிருக்கும், குறு, சிறு தொழில்முனைவோர்களின் முதலீடு காக்கப்பட வேண்டும். செபி தலைமை மேல் வைக்கப்பட்டிருக்கிற குற்றச்சாட்டு குறித்த விசாரணை மேற்கொள்ள நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா, “கடந்த ஆண்டு, அதானி மோசடியில் ஏன் செபி மெளனம் காக்கிறது என நாம் முன்வைத்த கேள்விக்கு, தற்போது ஹிண்டன்பர்க் நிறுவனம் பதிலளித்துள்ளது. பாதுகாப்பாளர்கள், அழிவு தருபவர்களாகியுள்ளனர். வேடிக்கை பார்த்தவர்கள் திருடர்களாகியுள்ளனர்” விமர்சித்துள்ளார்.
Also Read
-
பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் முதல் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வரை... துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அசத்தல்!
-
“2026-இல் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
“கீழடி,பொருநைக்கு சென்று பார்க்கச் சொல்லுங்கள்” : தமிழிசை சௌந்தரராஜனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
மற்றொரு நிர்பயா : பா.ஜ.க ஆளும் அரியானாவில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - உடலில் 12 தையல்!
-
“விளையாட்டுத் துறையில் இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு!” : துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!