Politics
எதிர்க்கட்சிகளின் ஒலி, ஓங்கத்தொடங்கியது! : 18ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர்!
2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி, 20 நாட்கள் கழித்து கூடிய, மக்களவையின் முதல் கூட்டத்தொடரிலேயே, பா.ஜ.க.வின் வலுவற்ற நிலை அம்பலமானது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதான எதிர்க்கட்சி தலைவர்கள் பெருமளவில் யாரும் பங்கேற்காதபோது, சுருங்கிய முகத்துடன் மோடி பிரதமராக பதவியேற்றது ஒருபுறம் இருக்க,
எதிர்க்கட்சி தலைவர்கள் அணிவகுப்பில், எம்.பி.யாக பதவியேற்றபோது, மோடியின் முகம் கூடுதலாக சுருங்கியது.
மக்களவையில் 237 பேர், மாநிலங்களவையில் 92 பேர் என, இந்தியா கூட்டணிக்கு மக்கள் கொடுத்த ஆதரவால், நாடாளுமன்றத்தின் நிலையே மாற்றம் கண்டுள்ளது.
அதற்கு எடுத்துக்காட்டாகவே, இன்று (24.06.24) நடந்த 18ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடரும் அமைந்தது.
அண்மையில் நீட், நெட் தேர்வுகளிலும், இதர தேசிய தேர்வுகளிலும் முறைகேடுகள் நடக்க காரணமாய் அமைந்த ஒன்றிய பா.ஜ.க.விற்கு, எதிர்குரல் எழுப்பிய எதிர்க்கட்சியினரின் ஒலி, நாடாளுமன்றத்தையே அதிரவைத்தது.
இதனால், இனி தவறிழைத்தால், நாடாளுமன்றத்தில் தலைகுனிய வேண்டி வரும் என்ற சூழலுக்கும், பா.ஜ.க.வின் அச்சத்திற்கும் வித்திட்டுள்ளது இந்தியா கூட்டணி.
Also Read
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
-
“அமைதியும் எளிமையுமிக்கவர்... திரைப்பாசம் குடும்ப பாசமானது..” - AVM சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!
-
சென்னை மாநகர செரீப்.. எழுத்தாளர்... தயாரிப்பாளர்... பன்முக கலைஞர் AVM சரவணன் காலமானார்!
-
SIR பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள இதுவே நோக்கம்... புட்டுப்புட்டு வைத்த முரசொலி தலையங்கம்!
-
‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான நிதியை 34% குறைத்தது ஏன்?: ராஜாத்தி சல்மா எம்.பி கேள்வி!