Politics
அண்ணாமலையை விமர்சித்த தமிழிசை - மிரட்டிய அமித்ஷா : பா.ஜ.கவில் உச்சக்கட்ட உட்கட்சி மோதல்!
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க படுதோல்வி அடைந்துள்ளது. மேலும் போட்டியிட்ட 21 தொகுதிகளில் 11 தொகுதிகளில் பா.ஜ.க டெபாசிட் இழந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழசை சவுந்திரராஜன்,” தமிழ்நாட்டில் நான் பா.ஜ.க கட்சியின் தலைவராக இருந்தபோது சமூக விரோதிகள் மாதிரி யாராவது தெரிந்தால் அவர்களை ஊக்குவிக்க மாட்டேன். ஆனால் இப்போது கட்சி பதவிகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் இருக்கிறார்கள். இவர்களை தவிர்த்து கட்சிக்காக உழைக்க கூடியவர்களுக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும்” என பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை விமர்சித்து கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இன்று ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சராக சந்திர பாபு நாயுடு பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவில் தமிழைசவுந்திரராஜனும் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் மேடையில் தமிழை சவுந்திராஜன் மூத்த தலைவர்களை சந்தித்தார். அப்போது, உள்துறை அமைச்சர் அமித்ஷா அவரை அழைத்து கடுமையாக கைநீட்டி மிரட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் பா.ஜ.க தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே உட்கட்சி மோதல் இருந்து வருகிறது. மூத்த தலைவர்கள் பலர் அண்ணாமலையை விமர்சித்து வந்தாலும் பா.ஜ.கவின் டெல்லி ஆதரவு உடன் அண்ணாலை ஆட்டம் போட்டு வருவதாக தமிழ்நாட்டு பா.ஜ.கவினரே புலம்பி வருகின்றனர். இதை மெய்பித்து உள்ளது அமித்ஷாவின் மிரட்டல்.
Also Read
-
FIFA உலகக் கோப்பை: தோற்றாலும் போராடுவோம்; அமெரிக்காவை வீழ்த்தி பெருமையுடன் விடைபெற்ற துருக்கி!
-
“மாரத்தான் ஓடுபவர்கள் புலம்பித் தவிக்கின்றனர்... இது கேவலமான செயல்!” : திமுக ஐ.டி விங் கடும் விமர்சனம்!
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
-
“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!