Politics
”எங்களுக்கு கேபினட் அமைச்சர் பதவி வேண்டும்” : பா.ஜ.கவுக்கு நெருக்கடி கொடுக்கும் அஜித் பவார்!
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பா.ஜ.க கூட்டணி 292 இடங்களையும் பிடித்தது. பா.ஜ.க தனிபெரும்பான்மையை பெறாததை அடுத்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.
இதையடுத்து நேற்று பிரதமர் மோடியுடன் சேர்த்து 72 பேர் புதிதாக ஒன்றிய அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 12 பேருக்கு கேபினட் மற்றும் இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியின் போது கூட்டணியில் இருந்த 2 பேருக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இம்முறை 12 பேருக்கு அமைச்சர் பதவியை வழங்கி உள்ளது பா.ஜ.க. கூட்டணி தயவால் ஆட்சி அமைத்ததே இதற்கு காரணம்.
தங்களுக்கும் கேபினட் அமைச்சர் பதவி கிடைக்கும் என அஜித் பவார் நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் பா.ஜ.க அவர்களுக்கு இணை அமைச்சர் பதவி மட்டுமே கொடுக்கப்படும் என கூறிவிட்டது. மேலும் பதவியேற்பு விழாவும் நடந்து முடிந்துவிட்டது.
இந்நிலையில் தங்களுக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என அஜித் பவார் போர்கொடி தூக்கியுள்ளார். இது குறித்து கூறியுள்ள அஜித் பவார், "பிரஃபுல் படேல் கேபினட் அமைச்சராக இருந்தவர். இவருக்கு இணை அமைச்சர் பதவி கொடுத்தால் சரியாக இருக்காது என்று நாங்கள் கருதுகிறோம்.
அதனால் கேபினட் அமைச்சர் பதவி வேண்டும் என பா.ஜ.கவிடம் தெளிவாக கூறிவிட்டோம். இன்றும் சில மாதங்களில் நாடாளுமன்றத்தில் எங்களது எண்ணிக்கை 4 ஆக உயர இருக்கிறது. இதனால் எங்களுக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
அதேபோல், தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்கும் தேர்தலில் போட்டியிடாதவர்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதும் NDA கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பதவி ஏற்பு விழா முடிந்து 24 மணி நேரத்திற்குள்ளேயே NDAக்குள் பூகம்பம் வெடிக்க துவங்கிவிட்டது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!