Politics
ஒன்றிய அமைச்சர் பேரணியில் காங்கிரஸ் ஆதரவாளர்... பத்திரிகையாளரிடம் கூறிய ஷாக் காரணம்... வீடியோ வைரல்!
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. மீதமிருக்கும் தொகுதிகளுக்கு ஜூன் 1-ம் தேதியோடு தேர்தல் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒன்றிய அமைச்சர் மனோஜ் திவாரியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
டெல்லியின் வட கிழக்கு தொகுதியில் பாஜக சார்பில் ஒன்றிய அமைச்சர் மனோஜ் திவாரி மீண்டும் போட்டியிடுகிறார். அதே தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் கன்னையா குமார் போட்டியிடுகிறார். இந்த சூழலில் பாஜக வேட்பாளர் மனோஜ் திவாரிக்கு ஆதரவாக தொகுதியின் பல்வேறு பகுதிகளில் வீதியாக வீதியாக சென்று பலரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அதில் காங்கிரஸ் வேட்பாளர் கன்னையா குமாரின் ஆதரவாளர் ஒருவரும் இருந்துள்ளார். இதையடுத்து பேரணியை வீடியோ எடுக்க சென்ற பத்திரிகையாளர், காங்கிரஸ் ஆதரவாளரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினார். அப்போது தான் காங்கிரஸ் வேட்பாளர் கன்னையா குமாரின் ஆதரவாளர் என்று அந்த நபர் தெரிவித்தார்.
மேலும் தேர்தல் பேரணிக்கு செல்வதால் வேலையில்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்தார். அதாவது பாஜக பேரணியில் பலரையும் பணம் கொடுத்து அழைத்து வருவதாக அவர் குறிப்பிட்டார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது கருத்துகளையும் பெற்று வருகிறது.
Also Read
-
அரசுக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 5 உதவிப் பேராசிரியர்கள் : பணி ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!
-
சிலிண்டர் தட்டுப்பாடு... மின்சாரம் யூனிட்டிற்கு ரூ.2 மானியம்... சலுகைகளை அறிவித்த முதலமைச்சர்!
-
“100 கி.மீ தூரத்திற்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம்!” : கிருஷ்ணகிரியில் துணை முதலமைச்சர் உரை!
-
“தி.மு.க. செய்த சாதனை என்ன என்பதை மக்கள் சொல்வார்கள்!” : பிரதமர் மோடிக்கு முரசொலி தலையங்கம் பதிலடி!
-
பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை மற்றும் ஓய்வூதிய உயர்வு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!