Politics
வேட்புமனுவை வாபஸ் பெற்று பாஜகவில் இணைந்த காங்கிரஸ் வேட்பாளருக்கு பிடி வாரண்ட்... காரணம் என்ன?
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்தனர். அந்த வகையில் மத்திய பிரதேசத்தின் இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்காக அக்ஷய் காந்தி பாம் (Akshay Kanti Bam) அறிவிக்கப்பட்டார். ஆனால் இவர் இறுதி நாளில் தனது வேட்புமனுவை திரும்பப்பெற்று காங்கிரஸில் இணைந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு இவருக்கு கண்டங்களுக்கு குவிந்தது.
இந்த சூழலில் தற்போது கொலை முயற்சி வழக்கில் அக்ஷய் காந்தி மற்றும் அவரது தந்தை ஆகியோருக்கு பிடி வாரண்ட் கொடுத்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். கடந்த 2007-ம் ஆண்டு நில தகராறு ஒன்றில் யூனுஸ் படேல் என்ற நபரை தாக்கியதாக அக்ஷய் காந்தி மற்றும் அவரது தந்தை மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பாக நேரில் ஆஜராக பலமுறை நீதிமன்றம் அக்ஷய் காந்திக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவையை பின்பற்றாமல் இருந்து வந்துள்ளார் அக்ஷய் காந்தி. அந்த வகையில் கடந்த ஏப்.24-ம் தேதி நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து அவர்களுக்கான முன்ஜாமீன் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, மே 10-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று (மே 10) அக்ஷய் காந்தி நேரில் ஆஜராகவில்லை. மேலும் தான் வெளியூர் சென்றிருப்பதாவது, தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றும், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறும் வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்த நிலையில், அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று மீண்டும் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு எதிராக பிடி வாரண்ட் உத்தரவையும் பிறப்பித்து, வரும் ஜூலை 8-ம் தேதிக்குள் இருவரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!