Politics
வேட்புமனுவில் தில்லுமுல்லு செய்த ஒன்றிய அமைச்சர் : மனைவியின் சொத்து மதிப்பு 500% அதிகரித்ததால் சர்ச்சை !
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இதன் காரணமாக அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜகவும் பல்வேறு கட்டங்களாக தங்கள் வேட்பாளர்களை அறிவித்தது. ஆனால், பாஜக அறிவித்த சில வேட்பாளர்கள் போட்டியிட மறுத்து விலகினர். இது பாஜகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், திருவனந்தபுரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒன்றிய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தவறான தகவலை அளித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்களின் அடிப்படையில் 2016-202 ஆண்டுகளுக்கு இடையே அவருடைய சொத்து மதிப்பு 100% குறைந்துள்ளது. அவர் மனைவியின் சொத்து மதிப்பு 500% அதிகரித்துள்ளது தெரியவந்தது.
அவருடைய சொத்து மதிப்பு 100% குறைந்துள்ளது. அசையும் சொத்து 28 கோடியில் இருந்து 9.25 கோடியாக குறைந்துள்ளது. கடன் பூஜ்ஜியம் சதவீதத்திலிருந்து 19.41 கோடியாக உயர்ந்துள்ளது. வருவாய் 28 கோடியில் இருந்து 5 லட்சமாக குறைந்துள்ளது. முதலீடுகள் 15 கோடியில் இருந்து 45 கோடியாக உயர்ந்துள்ளது நகைகளின் மதிப்பு இரண்டு கோடியில் இருந்து மூன்று புள்ளி இரண்டு ஐந்து கோடியாக உயர்ந்துள்ளது என்றும் தேர்தல் பிராமண பத்திரத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அதேபோன்று 2021-22 ஆம் ஆண்டு வருவாய் 680 ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. அதனைத் தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகரின் சொத்துமதிப்பு குறித்து வருமானவரித்துறை விசாரணை நடத்தும் என்று கூறப்பட்டுளது.
Also Read
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“முதுகெலும்பில்லா ஆட்சி தமிழ்நாட்டில் தொடர வேண்டுமா CM sir?” : அப்பாவு கடும் கண்டனம்!
-
குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையால் வந்த வினை : கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!