Politics
மஹாராஷ்டிராவில் நிறைவடைந்த இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடு : முழு விவரம் என்ன ?
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கும் நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாநிலங்களிலும் பாஜகவின் NDA கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணியும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.
தொடர்ந்து பல முக்கிய பகுதிகளிலும் அரசியல் கட்சி தலைவர்கள் மக்களை சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் பல மாநிலங்களில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்றைய முன்தினம் ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சியின் தொகுதி பங்கீடு முழுமையாக நிறைவடைந்தது.
இந்த சூழலில் ஜம்மு & காஷ்மீரில் நேற்று கூட்டணி நிறைவடைந்தது. காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி தலா 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதனைத் தொடர்ந்து இன்று பெரிய மாநிலங்களில் ஒன்றான மஹாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடு முடிவடைத்துள்ளது.
அதன்படி 48 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் சிவ சேனா உத்தவ் தாக்கரே பிரிவு 21 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் பிரிவு 10 இடங்களிலும் போட்டியிடவுள்ளன. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடு முடிவடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!