Politics
மஹாராஷ்டிராவில் நிறைவடைந்த இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடு : முழு விவரம் என்ன ?
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கும் நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாநிலங்களிலும் பாஜகவின் NDA கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணியும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.
தொடர்ந்து பல முக்கிய பகுதிகளிலும் அரசியல் கட்சி தலைவர்கள் மக்களை சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் பல மாநிலங்களில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்றைய முன்தினம் ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சியின் தொகுதி பங்கீடு முழுமையாக நிறைவடைந்தது.
இந்த சூழலில் ஜம்மு & காஷ்மீரில் நேற்று கூட்டணி நிறைவடைந்தது. காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி தலா 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதனைத் தொடர்ந்து இன்று பெரிய மாநிலங்களில் ஒன்றான மஹாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடு முடிவடைத்துள்ளது.
அதன்படி 48 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் சிவ சேனா உத்தவ் தாக்கரே பிரிவு 21 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் பிரிவு 10 இடங்களிலும் போட்டியிடவுள்ளன. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடு முடிவடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !