Politics
மஹாராஷ்டிராவில் நிறைவடைந்த இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடு : முழு விவரம் என்ன ?
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கும் நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாநிலங்களிலும் பாஜகவின் NDA கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணியும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.
தொடர்ந்து பல முக்கிய பகுதிகளிலும் அரசியல் கட்சி தலைவர்கள் மக்களை சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் பல மாநிலங்களில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்றைய முன்தினம் ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சியின் தொகுதி பங்கீடு முழுமையாக நிறைவடைந்தது.
இந்த சூழலில் ஜம்மு & காஷ்மீரில் நேற்று கூட்டணி நிறைவடைந்தது. காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி தலா 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதனைத் தொடர்ந்து இன்று பெரிய மாநிலங்களில் ஒன்றான மஹாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடு முடிவடைத்துள்ளது.
அதன்படி 48 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் சிவ சேனா உத்தவ் தாக்கரே பிரிவு 21 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் பிரிவு 10 இடங்களிலும் போட்டியிடவுள்ளன. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடு முடிவடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
வழிப்பறியில் ஈடுபடும் பாஜகவினர் : இளைஞரணி தலைவர் உட்பட 3 பாஜக நிர்வாகிகள் கைது - வேலூர் போலீஸார் அதிரடி !
-
"குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், புகாரளிக்க தயங்க வேண்டாம்" - சென்னை பெருநகர காவல் துறை!
-
மோடியின் பேச்சுகள் : “தேர்தல் அதிகாரிகளின் DNA-விலேயே அது இருக்கிறது...” - சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்!
-
கிர்கிஸ்தானில் வெடித்த வன்முறை : குறிவைக்கப்படும் வெளிநாடு மாணவர்கள் : இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை !
-
அயலகத் தமிழர்களுக்கான முக்கிய அறிவிப்பு: உறுப்பினர் பதிவு முதல் கல்வி, மருத்துவ உதவி வரை - முழு விவரம்!