Politics
தேர்தலுக்கு முன்னர் பாஜகவிலிருந்து விலகும் முக்கிய தலைவர்கள் : வடமாநிலத்திலேயே பாஜகவுக்கு தொடரும் சோகம் !
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இதன் காரணமாக அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜகவும் பல்வேறு கட்டங்களாக தங்கள் வேட்பாளர்களை அறிவித்தது. ஆனால், பாஜக அறிவித்த சில வேட்பாளர்கள் போட்டியிட மறுத்து விலகினர். இது பாஜகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.
அதோடு தேர்தலுக்கு முன்னர் பாஜகவிலிருந்து முக்கிய தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பிரேந்தர் சிங் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் பெரும் செல்வாக்கை கொண்டுள்ள பிரேந்தர் சிங் பாஜகவிலிருந்து விலகியது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது. பிரேந்தர் சிங்குடன் முன்னாள் எம்.எல்.ஏ.வான அவரின் மனைவியும் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக கூறியுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!