Politics
தேர்தலுக்கு முன்னர் பாஜகவிலிருந்து விலகும் முக்கிய தலைவர்கள் : வடமாநிலத்திலேயே பாஜகவுக்கு தொடரும் சோகம் !
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இதன் காரணமாக அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜகவும் பல்வேறு கட்டங்களாக தங்கள் வேட்பாளர்களை அறிவித்தது. ஆனால், பாஜக அறிவித்த சில வேட்பாளர்கள் போட்டியிட மறுத்து விலகினர். இது பாஜகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.
அதோடு தேர்தலுக்கு முன்னர் பாஜகவிலிருந்து முக்கிய தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பிரேந்தர் சிங் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் பெரும் செல்வாக்கை கொண்டுள்ள பிரேந்தர் சிங் பாஜகவிலிருந்து விலகியது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது. பிரேந்தர் சிங்குடன் முன்னாள் எம்.எல்.ஏ.வான அவரின் மனைவியும் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக கூறியுள்ளார்.
Also Read
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!
-
“அதிமுகவின் வாக்குறுதிகளுக்கு வாய் இருந்தால் கதறி அழுதிருக்கும்..” - பட்டியலிட்டு அமைச்சர் ரகுபதி தாக்கு!