Politics
40-க்கு 40 : திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி... எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதி? - முழு விவரம் !
இந்தியாவில் இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர அரசியல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடந்த 10 ஆண்டுகால பாசிச பாஜக அரசை வீழ்த்த, நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாகியுள்ளது.
இந்த கூட்டணி இந்தியா முழுவதும் தேர்தல் களத்தில் இறங்கவுள்ள நிலையில், இதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது. அண்மையில் டெல்லி, ஹரியானா, குஜராத், கோவா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்து றுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது.
அதன் முழு விவரம் பின்வருமாறு:
1. தி.மு.க. (DMK) - 21
2. காங்கிரஸ் (Congress) - 10 (தமிழ்நாடு - 9, புதுச்சேரி - 1)
3. ம.தி.மு.க. (MDMK) - 1
4. சி.பி.ஐ.(எம்) (CPIM) - 2
5. சி.பி.ஐ. (CPI) - 2
6. வி.சி.க. (VCK) - 2
7. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (IUML) - 1
8. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (KMDK) - 1
இதில்,
* IUML - இராமநாதபுரம் தொகுதி
* KMDK - நாமக்கல் தொகுதி
* VCK - விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகள் இறுதிசெய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்று இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
மேலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல முக்கிய கட்சிகளும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!