Politics
அடுக்கடுக்காக வைக்கப்பட்ட கேள்விகள்: திக்குமுக்காடிய ஒன்றிய அரசு!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் அமர்வு இன்று (2.2.24) நடைபெற்றது. கேள்வி நேரத்தில், ஒன்றியத்தின் நடவடிக்கைகள் தொடர்பான பல்வேறு குறைபாடுகளை முன்வைத்தனர் எதிர்கட்சி உறுப்பினர்கள்.
காங்கிரஸ் எம்.பி. ஹிபி ஈடன்:
“ஒன்றிய சுகாதாரத் துறையால்கேரளத்திற்கு தற்போது ரூ. 154 கோடி ஒதுக்கப்படுகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவரும், ஒன்றிய நிதி பகிர்வை சார்ந்துதான் இருக்கின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் 90% ஒன்றியம், 10% மாநிலம் என பகிரப்பட்ட நிதி, இந்த ஆட்சியில் 60 -40 ஆக உள்ளது. இது தொடர்பாக கடிதங்கள் அனுப்பட்டுள்ளன. எனினும் நிதி ஒதுக்கப்படவில்லை.”
காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய்:
”கடந்த ஜூலை 2022 அன்று குடியரசு தலைவராக பதிவியேற்றார் திரெளபதி முர்மு. அதன் பிறகு, புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்டது. ஆனால் அவருக்கு நாடாளுமன்றத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்நிலையில், ’புதிய நாடாளுமன்றத்தில் நுழைவது இதுவே முதல் முறை என்று குடியரசு தலைவர் திரௌபதி மூர்மு, கடந்த ஜனவரி 31 அன்று தனது உரையில் குறிப்பிட்டார். இதுவரை குடியரசு தலைவரை நாடாளுமன்றத்திற்கு அழைக்காதது ஏன்?’”
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே:
“சமூக நீதிக்கான பாஜகவின் நிலைப்பாட்டை தொடர, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவை பதவிநீக்கம் செய்யவேண்டும்.”
(டிசம்பர் 2023-ல், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, வருணாசிரம கருத்தை X தளத்தில் பதிவிட்டு, பின் நீக்கியது குறிப்பிடத்தக்கது.)
தி.மு.க மக்களவை தலைவர் டி.ஆர்.பாலு:
“மழை வெள்ளம் காரணமாக தமிழகத்தில் சுமார் 2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 100 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பொழிந்தது என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒன்றியத்தின் குழுக்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டன. எனினும் நிவாரணத்துக்கு கேட்கப்பட்ட ரூ. 37 ஆயிரம் கோடியை இன்று ஒன்றிய அரசு தரவில்லை.”
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!