Politics
அரசியலை தலைகீழாக மாற்றிய ராகுலின் யாத்திரை: தெலங்கானாவை கைப்பற்றும் காங்கிரஸ்.. வெளியான கருத்து கணிப்பு !
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றிபெறும் என கூறப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தெலங்கானா மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என சமீபத்தில் வெளியான Lok poll கருத்து கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தெலங்கானாவில் சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ந் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வெளியான அங்கு பிக் டிவி நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் அங்கு முதல் முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
கருத்து கணிப்பு முடிவுகளில் காங்கிரஸ் கட்சிக்கு 62 முதல் 69 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், தற்போதைய ஆளும் கட்சியான பிஆர்எஸ் கட்சி 46 முதல் 54 இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதே நேரம் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 5 முதல் 7 இடங்களிலும், பாஜக 3 முதல் 6 இடங்கள் மட்டுமே வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சி பெரிதாக பேசப்படாத நிலையில், ராகுல் காந்தியின் யோடோ யாத்திரை தெலுங்கானாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு தெலங்கானாவில் காங்கிரஸ் அறிவித்த வாக்குறுதிகள் அங்கு நிலைமையை தலைக்கீழாக மாற்றியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Also Read
-
கோவில் குடமுழுக்கில் பிரச்சனை.. தட்டிக்கேட்ட பெண்ணை கொடூரமாக தாக்கிய தவெக நிர்வாகி -கொந்தளிக்கும் மக்கள்!
-
தவெக அரசின் அட்டூழியம்.. புகாரை அடுக்கிய திமுக.. அதிர்ந்து போன ஆளுநர் மாளிகை! - முழு பட்டியல் இதோ!
-
FIFA 2026: திணறிய அர்ஜென்டினா.. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கேப் வெர்டே அணி!
-
"ஆள் பிடிப்பதற்காகவே த.வெ.க ஆட்சி நடக்கிறது!" - ஆளுநரிடம் ஆர்.எஸ்.பாரதி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!
-
குதிரை பேரத்தில் ஈடுபட்ட விஜய் அரசின் மூக்கு அறுபட்டது; கிரிமினல்கள் நிரம்பிய கேபினட்: இ.பரந்தாமன் பேட்டி