Politics
வலுவடையும் 'INDIA' கூட்டணி.. சிதையும் பாஜக கூட்டணி.. NDA கூட்டணியில் இருந்து விலகிய பவன் கல்யாண் கட்சி!
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திப்பது என முடிவெடுத்துச் செயல்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக ஜூன் 23ம் தேதி பாட்னாவில் எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 26 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.க வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட ஆறு முக்கிய அடிப்படை செயல்திட்டங்களை உருவாக்குவது குறித்தும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவது மட்டுமில்லாமல் அதை உரிய முறையில் தேர்தல் களத்தில் செயல்படுத்த பல்வேறு செயல் திட்டங்களை உருவாக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பு கூட்டணிக்கு ‘I-N-D-I-A’ (Indian National Developmental Inclusive Alliance) என பெயர்வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியா என்ற பெயரை கேட்டாலே பாஜக தலைவர்கள் அலறி வருகின்றனர். பலர் நமது நாட்டின் பெயர் இந்தியாவே இல்லை பாரதம் என்றும் கூறி வருகின்றனர்.
அதே நேரம் பாஜக சார்பில் இந்தியா கூட்டணியை உடைக்க பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தி வருகிறது. இதற்காக அமலாக்கதுறை, சிபிஐ அதிகாரிகள் மூலம் இந்தியா கூட்டணி தலைவர்கள் மிரட்டப்பட்டு வருகின்ற்னர். எனினும் இந்தியா கூட்டணி நாளுக்கு நாள் வலுவடைந்து வண்ணம் உள்ளன.
மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இந்தியா கூட்டணி விரைவில் உடைந்துவிடும் என கூறி வரும் நிலையி, அதற்கு மாறாக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி உடைந்து வருவது அக்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜகவில் இருந்து பாஜகவுக்கு அடுத்த பெரிய கட்சியான அதிமுக விலகுவதாக அறிவித்தது. இது இந்தியாவில் பாஜக மீதான நம்பிக்கையை பெரிய அளவில் சாய்த்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பிரபல நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் பாஜகவுக்கு இருந்த ஒரே வலுவான கூட்டணி கட்சியும் பாஜகவுடனான கூட்டணியை முறித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மேலும் பல கட்சிகள் பாஜகவுடனான கூட்டணியை முறிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
-
“அமைதியும் எளிமையுமிக்கவர்... திரைப்பாசம் குடும்ப பாசமானது..” - AVM சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!
-
சென்னை மாநகர செரீப்.. எழுத்தாளர்... தயாரிப்பாளர்... பன்முக கலைஞர் AVM சரவணன் காலமானார்!
-
SIR பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள இதுவே நோக்கம்... புட்டுப்புட்டு வைத்த முரசொலி தலையங்கம்!
-
‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான நிதியை 34% குறைத்தது ஏன்?: ராஜாத்தி சல்மா எம்.பி கேள்வி!