Politics
வாக்குறுதிகளை நிறைவேற்றாத பாஜக.. தெலுங்கானா வந்த மோடிக்கு போஸ்டர் ஒட்டி பொதுமக்கள் எதிர்ப்பு !
ஆந்திர மாநிலத்தில் இருந்து 9 ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ் கட்சியே ஆட்சியில் இருந்து வருகிறது, அங்கு இந்த வருடன் டிசம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என சமீபத்திய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்த நிலையில், அங்கு எப்படியாவது சில இடங்களில் வெற்றிபெற வேண்டும் என பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக முக்கிய தலைவர்கள் தெலுங்கானாவுக்கு சுற்றுப்பயணம் செய்தவண்ணம் உள்ளனர்.
அந்த வகையில் மோடியும் தெலுங்கானாவுக்கு கடந்த சில மாதங்களில் பலமுறை சென்றுவந்தார். ஆனால், அங்கு பாஜகவின் வளர்ச்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், தற்போது அங்கு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை தொடங்கி வைக்க தெலுங்கானா வந்துள்ளார்.
ஆனால், தெலுங்கானா வந்துள்ள மோடிக்கு அந்த மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட நிலையில், அங்கு ஒன்றிய அரசு சார்பில் ஏராளமான வளர்ச்சி பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் பாஜக ஆட்சியில் இருக்கும் 9 வருடங்களாக அங்கு எந்த வளர்ச்சி பணியும் மேற்கொள்ளவில்லை. மேலும், தெலுங்கானாவுக்கு சிறப்பு தகுதியையும் வழங்க ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. இதன் காரணமாக தெலுங்கானா வந்துள்ள மோடிக்கு அங்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பல்வேறு இடங்களில் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்களும், பேனர்களும் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காரணமாக மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read
-
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !
-
SIR-க்கு ஆதரவு : தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த பழனிசாமி கும்பல்- திமுக IT Wing விமர்சனம்!
-
"மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
-
"வாக்குரிமையை பறிக்கும் SIR சதித் திட்டத்திற்கு எதிராக போராடிடுவோம்" - திமுக கூட்டணிக் கட்சிகள் அழைப்பு !
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!