Politics
"அவர் பணத்தை அழிக்கவில்லை, கட்டமைப்பை கட்டி எழுப்புகிறார்" -அதானிக்கு RSS அமைப்பு ஆதரவு !
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டு கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டது. இந்த சரிவிலிருந்து இன்னும் மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் பல நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் லட்சம் பேர் வேலை இழந்து வீதிக்கு வந்துள்ளனர்.ஆனால் அதானி குழும நிறுவனத்தின் வருவாய் மட்டும் கணிசமாக உயர்ந்தது. இது எப்படி என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி என்ற ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.அதானி குழும நிறுவனங்களின் செயல்பாடுகளை ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் இரண்டு ஆண்டாக ஆய்வு செய்து இந்த குற்றச்சாட்டை நாங்கள் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது. அதோடு பங்குச்சந்தையிலும் முறைகேட்டில் ஈடுபட்டதன் மூலமே தம் நிறுவனப் பங்குகள் விலை அதானி குழுமம் அதிகரித்துள்ளது என்றும் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.
அதேபோல் கரீபியன் நாடுகள், மோரீஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் போலி நிறுவனங்களை அதானி நடத்தி வருகிறார். அரசாங்கம் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் உதவியுடனே அந்த மோசடிகள் நடந்துள்ளது என பகிரங்கமாகவே ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 நிறுவனங்களில் பங்குகள் மூன்று ஆண்டுகளில் 819% உயர்ந்துள்ளது. இந்த நிறுவனங்கள் அதிகமான கடனை பெற்றுள்ளன. இந்த 7 நிறுவனங்களில் 5 நிறுவனங்களில் விகிதங்கள் 1%க்கும் கீழே உள்ளது. இதனால் பணப்புழக்க அழுத்தத்தைச் சந்தித்துள்ளது.
அதானி குழுமம் பணமோசடி, வரி செலுத்துவோர் நிதி திருட்டு, பங்குச்சந்தை மோசடி என 17 பில்லியன் டாலர்கள் வரை மோடி செய்துள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தனது ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையை தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் கடும் சரிவை சந்தித்தன. இதன் காரணமாக அதானி நிறுவனத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் சரிவை சந்தித்துள்ளது. இதனால் அதானி உலக பணக்காரர் வரிசையில் 3-வது இடத்தில் இருந்து 9-வது இடத்துக்கு சரிந்துள்ளார். அவரது சொத்துமதிப்பு 1.4 லட்சம் கோடி சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதானியின் இந்த மோசடி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், "ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கை இந்தியாவின் செமி உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்களையும் கேள்வி எழுப்பியுள்ளது. இதனால் இந்த அறிக்கை உலகளவில் நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதானிக்கு RSS அமைப்பின் பொருளாதார பிரிவான சுதேசி ஜக்ரன் மன்ச் ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், "ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையால் இந்தியாவின் பெயர் சர்வதேச அளவில் பாதிக்கப்படாது. அதானி பணத்தை அழிக்கவில்லை இந்தியாவின் கட்டமைப்பை கட்டி எழுப்புகிறார்" எனக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் RSS அமைப்புக்கு நாட்டின் மீதோ அல்லது நாட்டில் நடக்கும் ஊழல்கள் குறித்தோ அக்கறை இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
Also Read
-
காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவரே கர்நாடக மாநிலத்தின் கருத்தை ஆதரிப்பதா? : வைகோ ஆவேசம்!
-
’பன்முகக் கலைஞர்’ : 10 ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் குறித்து பாடம்!
-
"மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் பல்வேறு குழுக்கள் இருக்கிறது" - முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கருத்து !
-
4 நாட்களுக்குப் பிறகு வாக்கு சதவீதத்தை வெளியிட்டது ஏன்? : தேர்தல் ஆணையத்திற்கு டெரிக் ஓ பிரைன் கேள்வி!
-
அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டிய பாஜக நிர்வாகி : நிலத்தை மீட்க சென்ற அதிகாரிகளுக்கு மிரட்டல்!