Politics
டெல்லி மாநகராட்சியை கைப்பற்றும் ஆம் ஆத்மி.. 15 ஆண்டுகளுக்கு பிறகு மண்ணை கவ்விய பா.ஜ.க!
டெல்லி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 250 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த 4-ம் தேதி நடைபெற்றது. 50.48% வாக்குகள் பதிவாயின. மொத்தம் 1.45 கோடி வாக்காளர்களில் 73 லட்சம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இத்தேர்தலில் 709 பெண்கள் உட்பட 1349 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்நிலையில், 250 வார்டுகளிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. சற்றுமுன் கிடைத்த தகவல்களின்படி, 106 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மேலும 26 வார்டுகளில் முன்னிலையில் உள்ளனர். சுல்தான்புரி வார்ட்டில் ஆம் ஆத்மியின் பாபி என்ற திருநங்கை வெற்றி பெற்றுள்ளார்.
அதேபோல் பா.ஜ.க 69 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 32 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 4 இடங்களில் வெற்றியும், 5 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி 126 வார்டுகளில் ஆம். ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளதால் டெல்லி மாநகராட்சியை ஆம்ஆத்மி கட்சி கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.
இந்த வெற்றியை அடுத்து ஆம்ஆத்மி தொண்டர்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். 15 ஆண்டுகளாக பா.ஜ.க. வசம் இருந்த டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றுவது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
10 ஆண்டுகள் கழித்து.. UPSC டாப் 10-ல் இடம்பிடித்த தமிழ்நாடு மாணவர்கள் : தூத்துக்குடியில் உதயநிதி பேச்சு!
-
தூத்துக்குடியில் ரூ.178 கோடியில் மருத்துவமனைக் கட்டடங்கள், வகுப்பறைகள் திறப்பு! - முழு விவரம் உள்ளே!
-
“விசுவாசத்துக்கு அடையாளம் OPS.. நிதிஷ்குமாரின் கதிதான் பழனிசாமிக்கும்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டபடி தொழிலாளர் ஓய்வு இல்லங்களை திறந்து வைத்த அமைச்சர் சி.வி.கணேசன்!
-
தமிழ்நாட்டின் வரலாற்றில் மருத்துவத்துறையில் காலிப் பணியிடங்கள் இல்லாத சூழல் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!