Politics
ரஷ்யா - உக்ரைன் போர்.. வடகொரியாவை தூண்டிவிட்ட அமெரிக்கா.. காட்டமான பதிலடி கொடுத்த வடகொரியா !
ரஷ்யா - உக்ரைன் இடையேயான 7 மாத போர் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக்கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இந்த நிலையில், போரில் ரஷ்யாவுக்கு அணுஆயுதங்கள் கொடுத்து வடகொரியா உதவுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது. ஆனால் அமெரிக்காவின் குற்றச்சாட்டை வடகொரியா முற்றிலுமாக மறுத்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த வடகொரியா, அமெரிக்கா பொறுப்பற்ற கருத்துகளை கூறுவதை நிறுத்த வேண்டும். உக்ரைனில் ரஷ்யாவிற்கு எந்த ஆயுதங்களையும் நாங்கள் ஏற்றுமதி செய்யவில்லை. இனி அப்படி செய்யும் எந்த திட்டமும் இல்லை.
ஒருவேளை ரஷ்யாவுக்கு ஆயுத ஏற்றமதி செய்ய நாங்கள் முடிவு செய்தாலும் கூட அதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் வட கொரியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியை அமெரிக்கா நிறுத்த வேண்டும்' என்று வட கொரியா பதில் கூறியுள்ளது.
Also Read
-
ஏன்? எப்படி? என்ன? - மக்களவையில் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த திமுக எம்.பி.-க்கள் - விவரம் உள்ளே!
-
பயோ மைனிங் முறை... சென்னை மாநகராட்சியில் 52.64 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம்!
-
தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு: ரூ.22,794 கோடி முதலீடு..127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.. விவரம்
-
Budget2026 : “தேர்தல் நாடகத்தில் கூட தமிழ்நாடு என்றால் பாஜக புறக்கணிக்கிறது..” - அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
‘ஜூம்லாவும், ஒப்பனையும்’ நிறைந்த பட்ஜெட்! திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கடும் விமர்சனம்!