Politics
ரஷ்யா - உக்ரைன் போர்.. வடகொரியாவை தூண்டிவிட்ட அமெரிக்கா.. காட்டமான பதிலடி கொடுத்த வடகொரியா !
ரஷ்யா - உக்ரைன் இடையேயான 7 மாத போர் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக்கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இந்த நிலையில், போரில் ரஷ்யாவுக்கு அணுஆயுதங்கள் கொடுத்து வடகொரியா உதவுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது. ஆனால் அமெரிக்காவின் குற்றச்சாட்டை வடகொரியா முற்றிலுமாக மறுத்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த வடகொரியா, அமெரிக்கா பொறுப்பற்ற கருத்துகளை கூறுவதை நிறுத்த வேண்டும். உக்ரைனில் ரஷ்யாவிற்கு எந்த ஆயுதங்களையும் நாங்கள் ஏற்றுமதி செய்யவில்லை. இனி அப்படி செய்யும் எந்த திட்டமும் இல்லை.
ஒருவேளை ரஷ்யாவுக்கு ஆயுத ஏற்றமதி செய்ய நாங்கள் முடிவு செய்தாலும் கூட அதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் வட கொரியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியை அமெரிக்கா நிறுத்த வேண்டும்' என்று வட கொரியா பதில் கூறியுள்ளது.
Also Read
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !