Politics
மேற்குவங்க கலவரம்: போலிஸ் அதிகாரியை தாக்கிய பாஜக தொண்டர்கள்.. காப்பாற்றிய இளைஞருக்கு குவியும் பாராட்டு !
மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது மம்தா பானர்ஜீ தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பல அரசியல் முன்னெடுப்புகளை பா.ஜ.க செயல்படுத்திவருகிறது. அதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் பாஜக அணிவகுப்பு நடத்தியது.
இதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பாஜக ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். இதற்காக ஏழு ரயில்களை பாஜக வாடகைக்கு எடுத்தது. இந்த பேரணியின்போது பெரும் கலவரம் வெடித்தது. கலவரத்தை கட்டுப்படுத்த போலிஸார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர்.
அப்போது பாஜக தொண்டர்கள் போலிஸார் மீது கற்களை வீசி தாக்கினர். மேலும், காவல் நிலையம் அருகே இருந்த காவல்துறை வாகனம் பாஜகவினரால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுதவிர பாஜகவினரின் தாக்குதலில் ACP டெப்ஜித் சாட்டர்ஜி என்ற அதிகாரியின் கை உடைக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பாஜகவினரால் கடுமையாக தாக்கப்பட்ட டெப்ஜித் சாட்டர்ஜியின் உயிரைக் காப்பாற்றிய முகம்மது ஷாஹித் என்ற இளைஞருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பேசியுள்ள முகம்மது ஷாஹித், பேரணியின்போது பாஜகவினர் காவல்துறையினரை அடிக்கத் தொடங்கினர், அவர்களிடம் தனியாக சிக்கிய ACP டெப்ஜித் சாட்டர்ஜியை சில போராட்டக்காரர்கள் இரக்கமின்றி தாக்கினர். ஒருகட்டத்தில்,ஏ.சி.பி போராட்டக்காரர்களின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டதும் நான், அந்த கும்பலிடமிருந்து அவரை இழுத்துச் எனது கடைக்கு பின்னால் மசூதிக்கு அழைத்துச் சென்றேன். மற்ற கடைக்காரர்கள் அவருக்கு உதவினார்கள். நாங்கள் அவரின் காலிலிருந்து கண்ணாடி துண்டுகளை எடுத்தோம்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
“தமிழ்நாடு இரத்ததானத்தில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது!” : தேசிய இரத்த தான நாளில் அமைச்சர் மா.சு பேச்சு!
-
“10,000 கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் உரையாடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!” : ககன்தீப் சிங் தகவல்!
-
நமக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!
-
சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டம் - நவீன வசதிகளுடன் ரயில் நிலையங்கள் : ரூ.250.47 கோடி ஒப்பந்தம்!
-
அமைச்சர் பதவியை பறிக்கும் மசோதா : ஒன்றிய அரசின் திட்டத்திற்கு செக் வைத்த இந்தியா கூட்டணி!