Politics
"ஆட்சி மொழியாக இந்திக்கு தகுதி இல்லை" - அண்ணா அடுக்கிய 6 காரணங்கள்.. வைரலாகும் பேரறிஞரின் பேட்டி !
தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனருமான பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை, இங்கு இரு மொழி கொள்கைதான் அமலில் இருக்கும் என தான் முதலமைச்சராக இருக்கும்போது சட்டமியற்றினார்.
சுமார் 55 ஆண்டுகள் கடந்த நிலையிலும் தமிழ்நாடு அண்ணா கொண்டுவந்த அந்த திட்டத்தைதான் பின்பற்றி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு தற்போது இந்தியாவில் முன்மாதிரி மாநிலமாகவும் முன்னேறிய மாநிலமாகவும் திகழ்கிறது.
நேற்று அண்ணாவின் பிறந்தநாள் தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், இந்தி மொழி குறித்து அண்ணா கொடுத்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த பேட்டியில், தெற்கில் இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்வதற்கு உங்கள் ஆட்சேபனை என்ன?”என்று பத்திரிகையாளர் ஒருவர் அண்ணாவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அண்ணா,"எனது ஆட்சேபனைகள் முக்கியமாக ஆறு:
முதலாவதாக, தென்னிந்திய சூழலில் இந்தி ஏற்றுக்கொள்ள முடியாதது.
இரண்டாவதாக, இது பெரும்பான்மையினரின் கொடுங்கோன்மையைக் குறிக்கிறது.
மூன்றாவதாக, தென்னிந்தியர்களை இரண்டாம் தர குடிமக்களாக குறைக்கும்.
நான்காவதாக, எம்மைப் போன்ற பன்மொழி நாட்டில், ஒரு பிராந்திய மொழி மற்றொன்றைப் போலவே நல்லது அல்லது கெட்டது. எனவே இந்திக்கு சிறப்புத் தகுதி இல்லை.
ஐந்தாவதாக, இந்தி பகுதிகள் இந்தி அல்லாத பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துவது தேசிய ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதை விட தடையாக இருக்கும்.
கடைசியாக, இந்தி, அதன் தற்போதைய வளர்ச்சிக் கட்டத்தில், போதுமானதாக இல்லை மற்றும் நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் விரைவான முன்னேற்றத்தின் கண்ணோட்டத்தில் அது பொருந்தாது. உதாரணமாக, நமது தேசியப் பறவையைத் தேர்ந்தெடுக்கும் போது, எண்ணியல் மேன்மைக் கொள்கையை ஏற்க வேண்டியிருந்தால், நமது விருப்பம் மயிலின் மீது அல்ல, பொதுவான காகத்தின் மீது விழுந்திருக்கும்!" என பதிலளித்தார்.
Also Read
-
"விரைவில் நடராஜன் இந்திய அணியில் இடம்பிடிப்பார்" - SRH பயிற்சியாளர் நம்பிக்கை !
-
நீட் வினாதாள் கசிவு - ”23 லட்சம் மாணவர்களின் கனவுகளை சிதைத்த மோடி அரசு" : ராகுல் காந்தி MP தாக்கு!
-
+2 தேர்வு முடிவுகள் : “குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
சாதிய வன்கொடுமைக்கு சாட்டையடி : +2 தேர்வில் நாங்குநேரி மாணவர் சாதனை!
-
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் கவனத்துக்கு: இ-பாஸ் விவரத்தை வெளியிட்ட தமிழ்நாடு அரசு !