Politics
ஆர்ப்பாட்டத்துக்கு ஆள் வராததால் பள்ளி சிறுவர்களை அழைத்து வந்த கொடுமை; அதிமுகவினரால் மக்கள் அதிருப்தி!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றபோது ராயபுரம் பகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர் திமுக பிரமுகரை அரை நிர்வாணப்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஜெயக்குமாரின் கைதை கண்டித்து 32 மாவட்டங்களிலும் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் ரயில் நிலையம் அருகில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர். காமராஜ் தலைமையில் காலை 10 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இன்று காலை 10 மணிக்கு அதிமுக நிர்வாகிகள் ஒரு சிலர் மட்டுமே அந்த பகுதியில் இருந்தனர். மேலும் அதிமுகவினர் கூட்டமும் மிக குறைவாக இருந்தது. இதனை அறிந்த அதிமுக நிர்வாகிகள் பல்வேறு ஊர்களில் இருந்து டாட்டா ஏசி, வேன் உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமான பொது மக்களை ஆபத்தான முறையில் வண்டியில் அமர வைத்து ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வந்தனர்.
இந்த வாகனங்களால் திருவாரூர் நகர் பகுதிக்குள் போக்குவரத்து நெரிசல் உண்டானது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்வோர் போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டனர். குறிப்பாக பள்ளி செல்லும் சிறுவர்களை ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வந்து அவர்கள் கையில் அதிமுக கொடியை கொடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட செய்தது பொதுமக்களிடையே முகம் சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!