Politics
பிரதமர் மோடியின் உரையின்போது காலியான நாற்காலிகள்: வாரணாசி பூத் நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது என்ன?
உத்தர பிரதேசத்தின் 6 மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3 மற்றும் 7ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பரப்புரை ஜோராக நடைபெற்று வருகிறது.
இப்படி இருக்கையில், வாரணாசியில் உள்ள 3,361 வாக்குச்சாவடிகளுக்கான நிர்வாகிகளை சந்திக்கும் வகையில் “பூத் விஜய் சம்மேளனம்” என்ற கூட்டம் நேற்று (பிப்.,27) நடைபெற்றது.
20,000க்கும் மேலான வாக்குச்சாவடி நிர்வாகிகள் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்றுவதாக இருந்தது. ஆனால் உரை தொடங்குவதற்கு அரைமணி நேரம் தாமதமானதால் நிர்வாகிகள் சோர்ந்து போயிருக்கிறார்கள்.
இதனால் வெகுநேரமாக காத்திருந்தவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்துச் சென்றிருக்கிறார்கள்.
இதன் காரணமாக பிரதமர் மோடி உரையாற்ற இருந்தபோது நூற்றுக்கணக்கான நாற்காலிகள் காலியாக இருந்திருக்கிறது.
இது தொடர்பாக பிரபல aaj tak செய்தியாளர்கள் கூட்டத்தில் இருந்து கிளம்பிச் சென்றவர்களிடம் விசாரித்த போது, நண்பகல் 12 மணியளவில் அனைவரும் தண்ணீர்கூட குடிக்காமல் ஆவலுடனேயே காத்திருந்தார்கள். ஆனால் நிகழ்ச்சி தாமதமானதால்தான் எழுந்து சென்றிருக்கிறார்கள்” எனக் கூறப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் இந்த சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
-
“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!
-
200 யூனிட்டு மின்சாரம் முதல் விஜய்யின் மூன்று பித்தலாட்டங்கள் : புட்டுப்புட்டு வைத்த முரசொலி!
-
“முதல்வரின் தவறான தகவலை சுட்டிக் காட்டியதற்கு ரெய்டா? ; மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்” : எ.வ.வேலு பேட்டி!