Politics
”முன்னாள் காக்கி; இந்நாள் சங்கி அண்ணாமலை” - புகைச்சலை வெளிப்படுத்திய திருப்பூர் பாஜக தலைவர்?
ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தன்னை பா.ஜ.கவின் இணைத்துக் கொண்டார். அதன் பிறகு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டவர் தோல்வியை தழுவிய அவர் தற்போது தமிழ்நாடு பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
கட்சியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அண்மைக்காலமாக கட்சியின் புதிதாக சேரும் ரவுடிகள், பிரபலங்களுக்கு பல்வேறு முக்கிய பதவிகளை பாஜக தலைமை வழங்கி வருகிறது. இது மூத்த நிர்வாகிகளிடையே சற்று புகைச்சலையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இப்படி இருக்கையில் ஜூலை 16ம் தேதி தமிழ்நாடு பாஜக தலைவராக பதவியேற்கவிருக்கும் அண்ணாமலைக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் அண்ணாமலையை வரவேற்று திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல் பேசியது சர்ச்சையையும் கட்சியினரிடையே குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
செந்தில்வேல் பேசியதாவது, “அமித்ஷா பெரிய சங்கி என்றால், அண்ணாமலை சிறிய சங்கியாவார். முன்னாள் காக்கியும் இந்நாள் சங்கியுமான அண்ணாமலையை வரவேற்பதில் மகிழ்ச்சி.” எனக் கூறியுள்ளார்.
அவர் அடுக்கடுக்காக பேசியது நகைச்சுவையாக இருந்தாலும் கட்சியினரிடையே சற்று அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!