Politics
”முன்னாள் காக்கி; இந்நாள் சங்கி அண்ணாமலை” - புகைச்சலை வெளிப்படுத்திய திருப்பூர் பாஜக தலைவர்?
ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தன்னை பா.ஜ.கவின் இணைத்துக் கொண்டார். அதன் பிறகு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டவர் தோல்வியை தழுவிய அவர் தற்போது தமிழ்நாடு பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
கட்சியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அண்மைக்காலமாக கட்சியின் புதிதாக சேரும் ரவுடிகள், பிரபலங்களுக்கு பல்வேறு முக்கிய பதவிகளை பாஜக தலைமை வழங்கி வருகிறது. இது மூத்த நிர்வாகிகளிடையே சற்று புகைச்சலையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இப்படி இருக்கையில் ஜூலை 16ம் தேதி தமிழ்நாடு பாஜக தலைவராக பதவியேற்கவிருக்கும் அண்ணாமலைக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் அண்ணாமலையை வரவேற்று திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல் பேசியது சர்ச்சையையும் கட்சியினரிடையே குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
செந்தில்வேல் பேசியதாவது, “அமித்ஷா பெரிய சங்கி என்றால், அண்ணாமலை சிறிய சங்கியாவார். முன்னாள் காக்கியும் இந்நாள் சங்கியுமான அண்ணாமலையை வரவேற்பதில் மகிழ்ச்சி.” எனக் கூறியுள்ளார்.
அவர் அடுக்கடுக்காக பேசியது நகைச்சுவையாக இருந்தாலும் கட்சியினரிடையே சற்று அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு : தேர்ச்சி பெற்ற டாப் 3 மாவட்டங்கள் - பட்டியல் இதோ !
-
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - இந்த முறையும் மாணவிகளே சாதனை !
-
“அழிவை உருவாக்க துடிக்கும் பாஜக... சட்டத்தை மாற்ற நினைப்பவர்களை மக்கள் மாற்றுவார்கள்” : முரசொலி சூளுரை!
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !