Politics
“நான் என்றைக்கும் கோபாலபுரத்து காவல்காரன்” - தவறான தகவல்களைப் பரப்புவோருக்கு ஜெகத்ரட்சகன் எம்.பி பதிலடி!
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்த பா.ஜ.க, என்.ஆர்.காங்கிரஸ் உடன் மிரட்டி கூட்டணி சேர முயற்சித்து வருகிறது.
இதற்கிடையே, தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி பற்றியும் தவறான தகவல்களை பா.ஜ.க ஆதரவு ஊடகங்கள் பரப்பி வருகின்றன. தேர்தல் நேரத்தில் தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு மக்களை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது பா.ஜ.க.
தி.மு.க எம்.பி., ஜெகத்ரட்சகன் குறித்து சமூக வலைதளங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் பரவிய நிலையில் அதுகுறித்து ஜெகத்ரட்சகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், “நேற்று முதல் சமூகவலைதளங்களில் சில தவறான செய்திகள் என்னைப் பற்றி பரப்பப்படுகிறது. எங்கள் கழகத் தலைவரும் குடும்ப தலைவருமாகிய தளபதி அவர்களை முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.
இன்று காலை தி.மு.க தலைவர் அவர்களின் கட்டளையை சிரமேற்கொண்டு புதுவை மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்து எங்கள் தோழமைக் கட்சியான காங்கிரஸ் உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு இருந்தேன்.
என் மீது சமூக வலைதளங்களில் வருகின்ற தவறான செய்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இதுகுறித்து சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளேன். நான் என்றைக்கும் கோபாலபுரத்து காவல்காரன்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“சபரி வர்மன் காவல் மரணம்.. கொடூரமான துறையாக முதல்வர் விஜயின் உள்துறை உள்ளது” : கீதா ஜீவன் காட்டம்!
-
போட்டோவுக்கு யார் போஸ் கொடுப்பது.. காமராஜர் பிறந்தநாள் விழாவில் மோதிக்கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள்!
-
கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ்வணக்கம்!
-
த.வெ.க அரசின் மாற்றம் இதுதானா? : லாக்கப் படுகொலைக்கு பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ கண்டனம்!
-
“சிபிஎஸ்இ-யில் 3-வது மொழி தேர்ச்சி கட்டாயம்.. மொழித் திணிப்பின் உச்சம்” : தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்!