Politics
பொருளாதார வீழ்ச்சியடைந்துள்ள தமிழகம் எப்படி வெற்றி நடை போடும்? - தி.மு.க எம்.எல்.ஏ பி.டி.ஆர் கேள்வி!
தமிழக இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், சென்னை அன்பகத்தில் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, திமுக ஆட்சி காலத்தில் 100 ரூபாய் உற்பத்தியானால், மாநிலத்திற்கு 10.59 ரூபாய் வருவாயாக இருந்த நிலை, ஜெயலலிதா ஆட்சியில் 9.62 ரூபாயாக ஆக குறைந்தது என்றார். இது, தற்போதைய ஆட்சியில் 7.20 ரூபாயாக குறைந்து போயுள்ளது என்று தியாகராஜன் குறிப்பிட்டார்.
அதிமுக ஆட்சியில் ஆண்டுக்கு 1 லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது எனவும் 2012-13 காலகட்டத்திற்கு முன் வருவாய் மிகை மாநிலமாக இருந்த தமிழகம் அதன் பின்னர் வருவாய் பற்றாக்குறை மாநிலமாக மாறியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார வீழ்ச்சி பற்றி பதினான்காவது நிதிக்குழு அறிக்கையிலேயே சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக பழனிவேல் தியாகராஜன் விளக்கினார்.
தமிழகம் வாங்கியுள்ள கடனால் கடந்த 10 ஆண்டுகளாக 2 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் வட்டியாக மட்டும் செலுத்தியுள்ளது தமிழக அரசு என அவர் தெரிவித்தார்.
2005-2011-ஆம் ஆண்டு வாக்கில் 10.9 % இருந்த தொழில் வளர்ச்சி, 2011-இல் இருந்து 2017 வரை 4.6 சதவீதமாக குறைந்துள்ளது என கூறிய பழனிவேல் தியாகராஜன்,வெற்றி நடை போடும் தமிழகம் என்று அதிமுக அரசு பொய் பிராச்சாரம் செய்து வருவதாக குறிப்பிட்டார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!