Politics
"தமிழகத்தில் கலவரம் வெடித்தால் அதற்கு எச்.ராஜா தான் காரணம்" - தமிமுன் அன்சாரி MLA பேட்டி!
தலைநகர் டெல்லியில் நடந்த வன்முறைகளும் கலவரங்களும் நாட்டையே பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளன. இஸ்லாமியர்கள் மீதான வன்முறைகளை இந்துத்வ கும்பல் நாளுக்கு நாள் தொடர்ந்து வருவது அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இதுதொடர்பாக திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, “பா.ஜ.க.வின் எச்.ராஜா மற்றும் கல்யாண் ராமன் ஆகியோர் ட்விட்டர் மூலம் மக்களிடையே மதக்கலவரங்களை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். தமிழகத்தில் கலவரம் நடந்தால் அதற்கு முழுமுதற் காரணம் இவர்கள் இருவரும்தான்.
டெல்லியில் பா.ஜ.கவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா பேசியதற்குப் பிறகுதான் வன்முறை நிகழ்ந்தது. அதுபோல, தமிழகத்தில் நிகழாமல் இருக்க முன்கூட்டியே காவல்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும்.
மத்திய அரசின் கருப்புச் சட்டங்களான குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறும் வரை ஜனநாயக அமைப்புகளுடன் அறவழியில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும்.
சி.ஏ.ஏவுக்கு எதிராக நாளை மறுநாள் (பிப்.,29) கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் ஜனநாயக அமைப்புகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கவுள்ளனர்.” என தெரிவித்தார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!