Politics
மதத்தை வாக்கு வங்கியாக மாற்றுகிறது பா.ஜ.க - தி.மு.க எம்பி கனிமொழி சாடல்!
சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க மகளிரணி சார்பில் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா, கோடம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில், தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி, சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, “குடியுரிமை சட்டம் என்னும் பெயரில் மக்களை சாதி மற்றும் மதத்தின் பெயரால் பிரித்தாளவேண்டும், வாக்கு வங்கியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் செயல்படக் கூடிய மத்திய அரசு தற்போது நடைபெறுகிறது.
மதம் அரசியல் என இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டு அனைவராலும் கொண்டாடக் கூடிய ஒரு பண்டிகையாக விழாவாக இருக்கிறது என்றால் அது பொங்கல் மட்டுமே.” எனக் கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், உள்ளாட்சி தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றியை சுட்டிக்காட்டி 2020ம் ஆண்டிலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது எனக் கூறினார்.
Also Read
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!