Politics
''இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படாது'' - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை அளிக்கப்படுமா? அவ்வாறெனில் விவரங்களைத் தெரிவிக்கவும், வழங்கப்படாதெனில் காரணங்களைக் கூறவும் என்று விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு, ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படாது என மத்திய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மத்திய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் நித்தியானந்த ராய் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில்:
“இந்திய குடியுரிமை என்பது இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை விதிகள் 2009 இன் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. அந்த சட்டத்தின் பிரிவு 5 இன் படி பதிவு செய்துகொண்ட அயல்நாட்டவர் எவரும் இந்திய குடியுரிமை பெற முடியும். அந்த சட்டத்தின் பிரிவு 6 இன் படி இயல்புரிமை (naturalisation) அடிப்படையில் குடியுரிமையைப் பெற முடியும்.
சட்டவிரோதமாகக் குடிபெயர்ந்தவர்கள் இந்த இரு விதத்திலும் இந்திய குடியுரிமையைப் பெற முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்கள்ளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று மக்களவை திமுக தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுதிப் பேசினார்.
Also Read
-
சிறுபான்மைத் தொண்டு நிறுவனங்களின் நிதியை முடக்கும் ஒன்றிய பாஜக அரசு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
”பழனிசாமிக்கு அருகதை இருக்கிறதா?” : அதிமுக ஆட்சியின் அவலங்களை பட்டியலிட்டு வெளுத்து வாங்கிய முதலமைச்சர்!
-
கொரோனாவிலும் ஊழல் செய்த பழனிசாமி, இப்போது கப்சாக்களை அடித்து விடுகிறார்... - முரசொலி விமர்சனம்!
-
”வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்... வடக்கு முதல் மேற்கு வரை முந்தி நிற்கும் திமுக” : முழு விவரம் அறிய!
-
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தை சூப்பர் ஃபாஸ்டாகத் தொடரபோகும் திமுக 2.0 : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!